Saturday, April 12, 2008

மஹாகவி பாரதி - யார் ?-----பதிவு 2

பாரதியார் பற்றிய முதல் பதிவின் சுட்டி இங்கே

அதன் தொடர்ச்சியாகவும் அல்லது தனிப் பதிவாகவும் வாசிக்கலாம்.

பொருளுதவி வேண்டி சீட்டுக்கவி

பதினைந்தே வயது நிரம்பிய பாரதியார் திருநெல்வேலியில் ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்த காலம்.எப்படியோ கஷ்டப்பட்டு அவரை திருநெல்வேலிக்கு படிக்க அனுப்பி விட்டார் அவருடைய தந்தை.ஆனால் பணம் அனுப்ப சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.எட்டையபுரத்தின் ஜமின்தாரை நேரில் சந்தித்து பணம் கேட்க தயங்கியிருக்கிறார்.ஏனெனில் அவர் நடத்திய எட்டையபுரம் ஜின்னிங் ஃபாக்டரியில் நஷ்டம் காரணமாக ஜமீந்தார் பங்குதாரராக போட்ட பணத்தை இழக்க நேரிட்டதே.அதனால் பாரதியே தன் கவித்திறமையை வெளிப்படுத்தி பொருளுதவி வேண்டும் விண்ணப்பத்தை சீட்டுக் கவியாக எழுதி ஜமிந்தாரிடம் அனுப்பி வைத்தார்.

விண்ணப்பப் பாடலில் கூட தமிழ் மேல் அவர் கொண்டிருந்த பற்று வெளிப்பட்டது.ஆதரிப்பில்லாததால் தமிழ் மொழி நலிவுருமாறு இருந்த நிலையையும் ஆங்கிலம் படித்தால்தான் வேலைவாய்ப்பு என்று இருந்த நிலையை

இன்னமு தினுஞ்சுவை யெய்வுறீஇ யமைந்த
செந்தமிழ்த் திருமொழி சிறிதுமா தரிப்பவர்
இன்மையி னிந்நா ளினிதுகற் பவர்க்கு
நன்மை பயவாது நலிந்திட மற்றைப்
புன்மொழி பலவும் பொலிவுற லாயின


என்று அழகாக கவிதையில் குறிப்பிடுகிறார்.

தனக்கு ஆங்கிலம் கற்க விருப்பமில்லை என்றாலும் , தந்தையார் வற்புறுத்துவதன் பேரில் கற்க வேண்டியிருப்பதையும் , தமிழ் மட்டுமே கற்றால் வேலை கிட்டுமோ என்ற ஐயப் பாட்டையும் அப்படியே விருப்பமின்றி கற்க முற்பட்டபோதும் பொருளிலாதாற்க்கு கல்வி இல்லை என்று "அன்றும்" இருந்த நிலையையும் குறிப்பிடுகின்றார்.


....... ........ உற்றவென் தந்தையார்
என்னையும் புறமொழி கற்கவென் றியம்புவர்.
என்னையான் செய்குவ தின்றமிழ் கற்பினோ
பின்னை யொருவரும் பேணா ராதலிற்
கன்னயா னம்மொழி கற்கத் துணிந்தனன்

எனினும்

கைப்பொரு ளற்றான் கற்ப தெவ்வகை?
பொருளா னன்றிக் கல்வியும் வரவில ;
கல்வியா னன்றிப் பொருளும் வரவில.

இது பாரதியால் எழுதப்பட்டு 100 ஆண்டுகள் முடிந்து விட்டது ( 1897-ல் எழுதியது) . இன்னும் நமது நாட்டில் அன்னிய மொழியின் தாக்கம் மற்றும் நல்ல கல்வி பெற அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை போன்றவற்றில் நிலைமை மேலும் மோசமாகி இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது :(

என்ன சொல்கிறீர்கள்?

இந்த சீட்டுக் கவி(தை)யைப் பொருத்தவரை இதுவே பாரதியார் எழுதிய முதல் பாடல் என்று கொள்ளத்தகும்.

மீண்டும் சந்திப்போம் ... பாரதியார் பற்றிய இன்னொரு சுவையான தகவலுடன்

அன்புடன் ...ச.சங்கர்

Tuesday, April 08, 2008

மஹாகவி பாரதி - யார் ?-----பதிவு 1

இதில் தொகுக்கப் படும் தகவல்கள் பாரதியார் பற்றி நான் படித்தவைகளை ஒரு குறிப்பாக எனது பதிவில் சேமிப்பதற்கும் அத்தகவல்கள் பற்றி ஏற்கனவே படிக்காதவர்களுக்கு சுவையும் ஆர்வமும் ஊட்டவே.தகவல் பிழை ஏதேனும் இருந்தாலோ அல்லது மேலும் சுவையான சம்பவங்கள் இருந்தாலோ பின்னூட்டத்திலோ அல்லது சுட்டியாகவே குறிப்பிடுங்களேன்.

இளமையில் புலமையின் சான்று

ஒரு சமயம் தமிழில் பண்டித்தியம் பெற்ற திரு . சோணாசலம் பிள்ளை அவர்களது மகன் திரு. காந்திமதி நாத பிள்ளை அவர்கள் தன்னை விட வயதில் இளையவரான பாரதியை மடக்க எண்ணி " பாரதி சின்னப் பயல் " என்ற ஈற்றடியைக் கொடுத்து அதற்கு பாட்டெழுதச் சொன்னாராம்.
உடனே பாரதி சாதுர்யமாய் காந்திமதி நாதப் பிள்ளையே வெட்கும் படி பின் வரும் பாடலை பாடினாராம்.


ஆண்டில் இளையவனென் றந்தோ, அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள்போ லுளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்
என்று பாடி, பிரித்துப் படித்தால் " காந்திமதிநாதனைப் பார்-அதி சின்னப் பயல் " என்று பொருள் வரும்படி பாடினாராம்.

ஆனால் , என்னதான் இருந்தாலும் வயதில் பெரியவரான காந்தி மதி நாதப் பிள்ளையை ஏளனம் செய்வது தவறு என்று, சில வார்த்தைகளையே மாற்றி பாடலை அர்த்தம் அடியோடு மாறிப் போகும் படி பாடினாராம். அந்தப் பாடல் கீழே.

ஆண்டில் இளையவனென் றைய, அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் - மாண்புற்ற
காரதுபோ லுளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்


இந்தப் பாடலை இயற்றும் போது பாரதியாருக்கு 15 அல்லது 16 வயதுதான்!!!!

இதே காந்திமதிநாதப் பிள்ளை பாரதியார் "இளசை ஒருபா வொருபஃது" என்ற பெயரிட்டு எழுதிய 11 பாடல்களடங்கிய பிரபந்தத்திற்கு புகழ்ந்து சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார் பின்வருமாறு

பாலாகற் கண்டா பழம் பொருந்து மின்னமு
தாலாகும் பாகா தமிழுருவா - ஏலாதி
இட்ட சருக்கரையா ஏரிளசைப் பாரதியார்
தொட்ட வொருவொருபஃது
.

சிறு வயதிலேயே பாரதியாருக்கு வாய்க்கப்பெற்றிருந்த புலமைக்கு இது ஒரு சான்று என்றால் மிகையில்லைதானே.

மீண்டும் சந்திப்போம் ... பாரதியார் பற்றிய இன்னொரு சுவையான தகவலுடன்

அன்புடன் ...ச.சங்கர்

Friday, April 04, 2008

கன்னட திரைப்படத் துறையினருக்கு சூபர் ஸ்டாரின் அட்வைஸ்

கற்பனைதாங்க :)
















சொல்ல நெனைச்சிருப்பாரு ..சொல்லாம விட்டுட்டாரு :)



அன்புடன்...ச.சங்கர்