Sunday, September 23, 2007

CNN-IBN TV-ல் எ அ பாலா-தமிழில் வலை பதிதல் பற்றி

15-09-07 வினாயகர் சதுர்த்தி அன்று இரவு 10.30 மணிக்கு CNN-IBN TV-ல் பன்மொழி வலை பதிதல் (Vernacular Blogging) பர்றி ஒரு நிகழ்ச்சி ஒளி பரப்பினார்கள். அதில் ஒரு ஹிந்தி வலை பதிவு பற்றியும் ஒரு தமிழ் வலைபதிவு பற்றியும் ஒளிபரப்பினார்கள்.

தமிழ் வலபதிதல் பற்றியும் அதன் மூலம் ஒரு ஏழைப் பெண்ணுக்கு கல்விக்கு நிதி திரட்ட முடிந்தது பற்றியும் நண்பர் என்றென்றெம் அன்புடன் பாலா பேசியிருப்பது ஒளிபரப்பானது.

அந்த நிகழ்ச்சியை இங்கு சென்று காணலாம்





நண்பர் என்றென்றும் அன்புடன் பாலாவிற்கு வாழ்த்துக்கள்

அன்புடன்...ச.சங்கர்

Tuesday, May 22, 2007

கருத்துக் கணிப்பு அரசியல் - Inside Story?

முதலில் திஸ்கி :)

"""எனக்கு தெரிந்த ஒரு நம்பகமான அரசியல் ஆர்வலர் நண்பரின் வாய்வழி செய்தி..இதற்கு எந்த ஆதாரமோ அல்லது தகவல்களோ என்னிடம் கிடையாது.எனவே இதை ஒரு காற்றில் உலவும் செய்தியாக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.""

சிறிது காலமாகவே முதல்வர் வயிறு சம்மந்தப் உடல் நலக் கோளாரால் அவதிப் பட்டு அதனால் நடக்க கஷ்டப்பட்டு வருகிறாரம்.அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரைவில் வெளிநாடு பயணம் செய்ய (அமெரிக்கா அல்லது லண்டன்)திட்டமிடப்பட்டுள்ளதாம். வயதை கருத்தில் கொண்டு சிகிச்சைக்கு செல்லும் முன் ஸ்டாலினை தனது வாரிசாக கோடி காட்டிவிட்டு சூழ்நிலை சரியாக இருப்பின் துணை முதல்வராக அறிவித்து விட்டு செல்ல திட்டமிடப் பட்டிருந்ததாம்.

இதை கலைஞர் தனது பொன்விழா மேடையில் அறிவிப்பதாக இருந்ததாம்.ஆனால் இங்குதான் இன்னொரு கணக்கு புகுந்து குழப்பி விட்டது.கட்சியில் சமீப காலமாக மற்றொரு power centre ஆக உருவெடுத்து வரும் மாறன் குடும்பத்தினர் கலைஞருக்கு பிறகு கட்சியில் தங்களது பிடிமானத்தை நிலை நிறுத்திக் கொள்ள காய் நகர்த்தியுள்ளனர் என்கிறார்கள்.

அதன் தொடக்கமே இந்த கருத்துக் கணிப்பு நிகழ்வு. ஸ்டாலின்தான் அடுத்த வாரிசு என்பது foregone conclusion என்பதாலும் அப்படி போடுவது கருத்துக் கணிப்பின் credibility யை அதிகப்படுத்தும் என்பதாலும் அதை போட்டு அடுத்த இடத்தில் யார் யார் என்று சொல்லாமல் "மற்றவர்கள்" என்று பொத்தம் பொதுவாக போட்டு தயாநிதி மாறனை மறை முகமாக குறிப்பது போல் தோற்றம் உண்டாக்கவும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவுமே அழகிரி மூன்றாவது இடத்தில் குறிப்பிடப் பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தக் கருத்துக் கணிப்பை கலைஞரிடம் காட்டி,அவரது வாரிசு அறிவிப்பிற்கு இது ஒரு முன்னோடியாக அமையும் என்று எடுத்தியம்பிய போதும் இதிலுள்ள முரண்கள் அதனால் கட்சியில் எதிர்பார்க்கக்கூடிய பின் விளைவுகளை கணக்கில் கொண்ட கலைஞர் கருத்துக் கணிப்பை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் பொன்விழாவில் கலைஞர் அடுத்தது யார் என்று கோடி காட்டுவதற்கு முன் கருத்து கணிப்பை வெளியிட்டு "நாங்கள் சொன்னது சரிதான்" என சொல்லி அதற்கு பக்கபலம் சேர்ப்பதற்காக calculated risk எடுத்து மாறன் தரப்பு இந்தக் கருத்து கணிப்பை அவசரமாக (பொன்விழாவிற்கு முன்) வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் எதிர்பார்க்கப் பட்டதற்கும் மேலாக மதுரை reaction அமைந்து அதனால் மூவரின் உயிரிழப்பு ஏற்பட்டதும் அனைவரும் அறிந்த செய்தி.இதனால் தன் பொன் விழாவில் வாரிசு பற்றி கோடி காட்டும் சந்தர்ப்பம் முற்றிலும் கை நழுவிப் போனதாலேயும், மதுரை சம்பவத்தில் அழகிரியின் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதால் தனது வாரிசுகளின் மேல் தேவையில்லாத நேரத்தில் Wrong Focus ஏற்பட்டு விட்டதாலும்தான் எப்போதும் "மறப்போம் மன்னிப்போம்" பாலிசியை கடைப்பிடிக்கும் கலைஞர் டென்சன் எகிற மாறன் குடும்பத்தின் எந்த சமாதான முயற்சிக்கும் செவி சாய்க்காமல் /இடம் கொடுக்காமல் இருக்கிறாறாம். இது இப்போதைக்கு தொடரும் என்றும் சொல்கிறார்கள்.

அடுத்து மாறன் குடும்பத்தினர் எப்படி காய் நகர்த்தப் போகிறார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.எது எப்படியோ இந்த சூழலை பயன் படுத்தி , விஷயங்களை தெளிவு படுத்த , கலைஞர் கூடிய விரைவில் ஸ்டாலினை வாரிசாக கோடி காட்டி விட்டு வெளி நாடு பயணப் படுவார் என்று சொல்லப் படுகிறது ...உண்மை என்னவோ யான் அறியேன் பராபரமே

அன்புடன்...ச.சங்கர்

Monday, May 21, 2007

திருத்தலப் புகைப்படங்கள்-9 திருஆலவாய்

மதுரை என்று வழங்கும் திருஆலவாய் அன்றும் இன்றும் தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க, பாரம்பரியம் மிக்க, கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவே திகழ்ந்து வந்துள்ளது.

இங்குள்ள மீனாட்சி அம்மன், சொக்கநாதர் கோவில் பாண்டியராலும் பின்னர் நாயக்கர்களாலும் உருப்பெற்று பொலிவு பெற்றும் உள்ளது...மாலிக்காபூர் போன்ற அனேக வேற்று நாட்டவர் படையெடுப்புகளையும், உள்நாட்டுப் போர் முதலியவற்றையும் தாங்கி காலத்தால் அழியாத சின்னமாக நிற்கிறது.

கோவிலும் நகரமும் எங்கு அமைய வேண்டும் என ஈசனே மலைப்பாம்பு வடிவில் வந்து எல்லைகளை காட்டியதால் "திரு ஆலவாய்" எனப் பெயர் பெற்றது என்பது தல வரலாறும் சிவ பெருமான் திருவிளையாடல்களில் ஒன்றாக சொல்லப் படுவதும் ஆகும்.

ஒவ்வொரு முறை இந்தக் கோவிலுக்குள் செல்லும் போதும் அதன் விஸ்தீரணமும்..புதிது புதிதாக நான் தெரிந்து கொள்ளும் கலை , இலக்கிய, வரலாற்று, ஆன்மீக, சிற்பங்கள் மற்றுப் பல விஷயங்கள் என்னைப் போன்ற பாமரனை பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.

இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்பத்திற்கும் ஒன்றல்ல பல கதைகள் வழக்கிலுள்ளன...அது போல் நூற்றுக்கணக்கான சிற்பங்கள்..இவ்வாறு இந்தக் கோவிலின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம் :)

இத்திருத்தலத்தின் விஸ்தீரணத்தையும் சிறப்புகளையும் சில புகைப்படங்கள் சொல்லி விளக்கி விட முடியாது என்பதே உண்மை.


மேற்கு கோபுரமும் கோபுரவீதியும்

நான்கிலும் மிக உயரமான தெற்கு கோபுரம்
கோபுரப் பின்னணியில் பொற்றாமரைக் குளம்
கோவில் விதானங்களும் கிழக்கு மற்றும் வடக்கு கோபுரங்கள்
கோபுரத்திலுள்ள சிற்பங்களின் ஒரு பகுதி




அன்புடன்...ச.சங்கர்

திருத்தலப் புகைப்படங்கள்-8 திருவாதவூர்

மதுரைக்கு அருகில் 22 கிமி தொலைவில் உள்ள இந்த ஊரில்தான் "திருவாசகம்" மற்றும் "திருக்கோவையாரு" இயற்றிய மாணிக்க வாசகர் பிறந்தார்.அதனால் வாதவூரார் என்றும் அழைக்கப் படுகிறார்.

இங்குள்ள சிவன் "வாதபுரீஸ்வரர்" அதாவது வாயுவால் வழி படப் பட்டவர் என்று வழங்கப் படுகிறார்.

இங்குள்ள சிவன் ஆலயத்தில் சனி பகவன் சந்நதி தனியே அமைந்திருப்பது பிரசித்தி.சனி பகவான் வாத நோயால் அவதிப் பட்ட போது இங்குள்ள சிவனை பூசித்து அதனால் வாதநோய் தீர்ந்ததால் "வாதவூர்" என்று தலம் பெயர் பெற்றதாகவும் சொல்கிறார்கள்.இன்றும் மக்கள் நோய் தீர இக் கோவிலுக்கு வருகின்றனர்.

கோவில் முகப்பு

கோபுரம்

மாணிக்கவாசகர் பக்தியியினால் குதிரை (பரி) வாங்க அரிமர்தன பாண்டிய மன்னன் தந்த காசை "திருப்பெருந்துறை" திருத்தலப் பணிகளுக்கு செலவு செய்து விட அதை அறிந்து கோபம் கொண்ட மன்னன் அவரை சிறையில் அடைத்து தண்டிக்கிறான்.

பக்தனை காக்க சிவ பெருமான் காட்டிலுள்ள நரிகளைப் பிடித்து பரியாக மாற்றி, தேவ கணங்களை பாகர்களாக்கி தானே குதிரை சேவகனாகவும் குதிரை சாத்தோடு வந்ததாய் திருவிளையாடல் புராணம் சொல்கிறது. இதை

"குதிரையைக் கொண்டு குடநா டதன் மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்"

"அரியொடு பிரமற் களவறி யொண்ணான்
நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்"

"மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும் "


என்றெல்லாம் பாடியதிலிருந்து அறியக் கிடைக்கிறது

அன்புடன்...ச.சங்கர்

திருத்தலப் புகைப்படங்கள்-7 திருமோகூர்

இதுவும் நம்மாழ்வாரால் பாடப் பெற்ற தலம். 108 திருத்தலங்களில் ஒன்று.பெருமாள் காளமேகம் என்றும் வழித்துணைப் பெருமாள் (மார்க்கபந்து) என்றும் தாயார் மோகனவல்லி என்றும் திரு நாமம் பெற்று விளங்குகிறார்கள். இக் கோவிலின் சக்கரத்தாழ்வாரை மிகவும் விஷேஷமாக கூறுகின்றனர். விஷ்ணு இங்குதான் மோஹினி அவதாரம் எடுத்ததாக கூறப்படும் புராண வரலாறு தெரிந்தவர் யாராவது எழுதலாமே :)

கோவிலின் முகப்பு
கோபுரத் தோற்றம்

கோவிலின் உட்புறம்


அன்புடன்...ச.சங்கர்

Sunday, May 20, 2007

திருத்தலப் புகைப்படங்கள்-6 அழகர் மலை

திருமாலிருஞ்சோலை என்று போற்றப்படும் அழகர் மலை திருமாலின் மற்றொரு பாடல் பெற்ற தலமும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றும் ஆகும். அழகர் கோவிலுள்ள அழகர் மலையில்தான் பழமுதிர் சோலை அமைந்துள்ளது. மதுரையில் நடக்கும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணம் காணத்தான் இந்தக் கோவிலில் இருக்கும் அழகர் சித்திரை மாதம் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி பின் வருவதற்குள் திருமணம் முடிந்து விட்ட கோபத்தில் திரும்பச் செல்கிரார் என ஐதீகம்.

நான் போன போது உற்ச்சவர் கள்ளழகர் மதுரை போயிருந்தார்,மூலவருக்கு எண்ணைக் காப்பு சாத்தியிருந்தது, கோபுரத் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தது, யானைக்கு உடல் நிலை சரியில்லாததால் யாரும் போக முடியா வண்ணம் கொட்டடியில் அடைத்து வைத்திருந்தனர் :)
சரி..அழகரை காணஅடுத்த தடவைதான் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும் போல :)

கோவில் கோபுர படம் என்னிடம் இல்லாததால் ப்ரசன்னா அவர்களது வலையிலிருந்து ஒரு படம் மட்டும் சுட்டு போட்டிருக்கிறேன்

















எனக்கு கிடைத்த கோபுர தரிசனம் :)


இந்தக் கோவில் தூண்களில் உள்ள சிலைகள் மிகவும் கலை அழகுடனும் நுட்பமாகவும் செதுக்கப் பட்டவை.கீழ்க்காணும் படங்களை நீங்களே பாருங்களேன்.
ஆனால் இதில் சில சிலைகளின் கைகள் முதலானவை சேதப் பட்டிருப்பது பல படையெடுப்புகளின் போதா இல்லை பராமரிப்பின்மையாலா தெரியவில்லை..எதாக இருந்தாலும் மிக துரதிர்ஷ்ட வசமானது :)

திருவிக்ரமர்






















கருட வாகனத்தில் விஷ்ணு பகவான்


















வராக மூர்த்தி

ஹிரண்யனுடன் சண்டையிடும் நரசிம்ஹ மூர்த்தி


ஹிரண்ய வதம் முடிந்ததும் குடலை மாலையாக சூடும் நரசிம்ஹர்













இந்த இரு நரசிம்ஹ அவதார சிற்பன்களிலும் சண்டையிடும் ஹிரண்யன் உயிரோட்டமாகவும்(முதல் படம்) வதம் செய்யப்பட்ட பிறகு உடல் தொய்ந்து தலை தொங்கி(இரண்டாம் படம்) தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருப்பதை காணலாம்.

அன்புடன்...ச.சங்கர்

திருத்தலப் புகைப்படங்கள்-5 பழமுதிர்சோலை

மதுரை அருகில் அழகர் மலை மேல் பழமுதிர்ச்சோலை என்கின்ற முருகனின் ஆறாவது படைவீடு அமைந்துள்ளது.

ஒளவைப் பாட்டியிடம் முருகன் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டு பழம் உதிர்த்தளித்ததால் பழம் உதிர் சோலை என்று பெயர் வந்ததாக சொல்வோரும் உண்டு.



கோவிலின் முகப்பு


கோவில் கோபுரம்




கோவில் உட்புறத் தோற்றம்



மலை மேல் நூபுர கங்கை




முருகனை தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர் ஒருவர்






அன்புடன்...ச.சங்கர்

Saturday, May 19, 2007

திருத்தலப் புகைப்படங்கள்-4 திருப்பரம்குன்றம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தலம்
குடைவரை கோவில் வகையை சார்ந்தது..இங்குதான் முருகன் தேவயானியை மணந்ததாக ஐதீகம்

கோபுரத் தோற்றம்





கோவிலின் முகப்பு



திருப்பரம்குன்றம் பற்றி மேலும் சில படங்களுடன் ப்ரசன்னா தனது வலைப்பதிவில் இங்கு எழுதியுள்ளார்.

அன்புடன்...ச.சங்கர்

திருத்தலப் புகைப்படங்கள்-3 திருவண்ணாமலை

திருவண்ணாமலை என்றாலே பெரும்பாலானோருக்கு அருணாசலேச்வர்தானே ஞாபகத்திற்கு வருவார்..ஆனால் திருவில்லிபுத்தூருக்கு அருகில் ஒரு திருவண்ணாமலை உள்ளது...இது ஒரு வைணவத்தலம்.இங்கு மஹாவிஷ்ணு வேட்டைப்பெருமாளாக கத்தி முதலிய ஆயுதங்களுடன் ஸ்ரீனிவாசர் என்ற நாமகரணத்துடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இது மேற்குமலைத் தொடரின் அடிவாரத்தில் சிறு மலை மீதமைந்த கோவில் ..சுமார் 200 படிக்கட்டுக்கள் ஏறி கோவிலுக்கு செல்ல வேண்டும்

கோவிலிலிருந்து பார்த்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் அழகுறத் தெரியும்

கோவில் கோபுரம்


கோவிலுக்கு செல்லும் பாதை





நடு வழியில் கண்ணன் கோவில்




கோவிலிலிருந்து பார்த்தால்




அன்புடன்...ச.சங்கர்

திருத்தலப் புகைப்படங்கள்-2 திருவில்லிபுத்தூர்

பொதுவாக திருவில்லிபுத்தூர் என்றாலே வைணவ திருத்தலம் ,ஆண்டாள் கோவிலும் கோபுரமும் இதெல்லாமும் தான் பெரும்பாலானோருக்கு நினைவில் வரும். ஆனால் இதே திருவில்லிபுத்தூரில் சிவ பெருமானுக்கும் ஒரு சிறப்பான கோவில் "மடவார் விளாகம்" என்ற பெயரில் உள்ளது. அங்குள்ள சிவன் "வைத்தியநாதசுவாமி" என்ற பெயரில் காட்சி தருகிறார்

அந்தக் கோவிலின் சில புகைப்படங்கள் கீழே

கோவிலின் உயர்ந்த கோபுரம்



கோபுரம் மற்றும் குளத்தின் ஒரு பகுதி



பெருமானை வழிபட்டே தீருவது என்று கோவிலில் சன்னதிக்கு எதிரில் தலை கீழாக தொங்கும் சில பக்த கணங்கள் :)



அன்புடன்...ச.சங்கர்

பதுங்கு குழியில் இரண்டு ....



இந்த வார ஆ.வி.யில் உலக சினிமா பகுதியில் செழியன் " No man's Land " என்ற படத்தினைப் பற்றி எழுதியிருக்கிறார்.

அந்தப் படம் பற்றி தமிழ் இயக்குனர் மிஷ்கின் சிறப்பு விமர்சனம் அளித்துள்ளார்..அதன் ஒரு பகுதி

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
.
" எந்த உயிரினமும் பிறக்கும் போதே போர்க்குணத்தை தன் உயிரில் ஒளித்து வைத்துக் கொண்டு பிறக்கிறது.தன் ஞாயத்தை இன்னொரு உயிரினத்தின் நியாயத்தில் புகுத்த முயற்சி செய்து தோற்றுப் போதலே போர்!
ஒரு பதுங்கு குழியில் மாட்டிக் கொண்ட இரண்டு எதிரிகள்.தான் சொல்வதே ஞாயம் என்றும், தனது சொந்தத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே போராடிப் போராடி,தங்களைக் கொலை செய்து கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள்.அல்லது இரண்டு கொள்கைகள்..அல்லது இரண்டு தேசங்கள்.

"உங்களால்தான் இந்தப் போர் முதலில் ஆரம்பிக்கப்பட்டது" என்று இரண்டு கதாபாத்திரங்களும் மாறி மாறிக் குற்றம் சாட்டிக் கொள்ள, என்னால் இந்தப் போர் இப்போதே நிருத்தப் பட வேண்டும் என்ற எண்ணம் படம் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயத்திலும் ஒலிக்க, இயக்குனர் உயரமாகிரார்.அவர் படைப்பின் ஆழம் புரிகிறது.

நண்பர்களே, தயவு செய்து இந்தப் படத்தை ஒரு முறை பாருங்கள். முடிந்தால் மறுமுறையும் பாருங்கள்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த விமர்சனம் தமிழ் வலைத்தளத்தின் இன்றைய நிலையை பற்றி மறை முகமாக சொல்வது போல் எனக்கு ஏன் தோன்றுகிறது ??? அல்லது இது எனது ப்ரமைதானா:)

அன்புடன்...ச.சங்கர்

Friday, May 18, 2007

திருத்தல புகைப்படங்கள்- 1...சங்கரன்கோவில்

கோவில் கோபுரம்

 

படத்தின் மீது க்ளிக்கி பெரிதாக்கிப் பார்த்தால் கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகளை ரசிக்கலாம்



பிரசித்தி பெற்ற நாகப் புற்று ( சங்கரன் கோவில்)



அன்புடன்...ச.சங்கர்

Wednesday, May 16, 2007

வீனஸ் Vs மோஹினி

அழகின் தேவதைகள்

கிரேக்க புராணங்களில் அழகின் தேவதையாக சித்தரிக்கப்படுவது "வீனஸ்"தான்.வீனஸின் சிற்பங்கள் புராண காலந்தொட்டே பல பெரிய கலைஞர்களால் கற்பனை செய்யப்பட்டு, வடிக்கப் பட்டு என்று வரலாறு முழுவதும் காணப்படுகிறது.அந்த அழகின் தேவதையின் இரண்டு உலகப் புகழ் பெற்ற சிற்பங்கள் கீழே.




















இந்தியாவில் தென்னாட்டு சிற்பக்கலையும் இதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்பதற்கான பல எடுத்துக்காட்டுகள் நமது கோவில்களில் காணப்படுகின்றன.ஹிந்து புராணங்களில் அழகுக்கு உதாரணமாக சொல்லப்படுவது மஹாவிஷ்ணு எடுத்ததாக சொல்லப்படும் "மோஹினி" அவதாரம்தான்.அழகிய மோஹினி அவதார சிற்பங்களை பல கோவில்களில் நாம் காண முடியும்.சமீபத்தில் குடுமியன் மலை சென்ற போது அங்கிருந்த மோஹினி அவதார சிலைகள் வடிவமைக்கப் பட்டிருந்தது தத்ரூபமாகவும் கலை நயத்துடன் காணப்பட்டது.அந்தப் படங்கள் கீழே.





















Tail Piece :
1.குடுமியன் மலை தமிழ் நாட்டில் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது

2.குடைவரை குகைக் கோவில் வகையை சேர்ந்த இது 7 ஆம் நூற்றாண்டு காலத்தையது என்றும் அன்று தொடங்கி பல்லவர்,பாண்டியர்,சோழர்,விஜயநகர,ஹோய்சாள,நாயக்கர், சேதுபதி எனப் பல மன்னர்களாலும் பல நூற்றாண்டுகளாக புனரமைத்து வடிவம் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

3.இங்குள்ள அனைத்து சிற்பங்களிலும் ஏதேனும் ஒரு பாகம்( முக்கியமாக மூக்கு) பின்னப்படுத்த /சேதப்படுத்தப் பட்டிருப்பது மாலிக்காபூர் படையெடுப்பின் போது என்று சொல்லப்பட்டாலும் இதற்கான சரித்திர ஆதாரம் எதுவும் ஆவணங்களில் இல்லை என்றும் சொல்லப் படுகிறது.(மேலே உள்ள மோஹினி சிற்பங்களின் மூக்கும் சிதைந்திருப்பதை பார்க்கலாம்)

4.மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு மோஹினி சிலைகளும் எதிரெதிர் தூண்களில் அமைக்கப் பட்டிருக்கிறது.இரண்டு சிலைகளுக்கும் உள்ள உடற்கூறு மற்றும் உருவ வேறுபாடுகள் துல்லியமாக வடிக்கப் பட்டிருப்பதை பார்க்கலாம்.ஒரு சிலை ஒல்லியாகவும்(இடது) சற்று உயரமாகவும் மற்றது சற்றே குட்டையாகவும் பருமனாகவும்(வலது)

5.இது என்னைப் பொருத்த வரை இரண்டு (மாடல் அழகிகள்) ஆடல் அணங்குகளை மாடலாக வைத்து செதுக்கப் பட்டிருக்கவேண்டும் என்று லாஜிக்கலாக தோன்றினாலும் கைடு சொன்ன தகவல் சற்று சுவாரசியமானது....அதாவது மஹாவிஷ்ணு இரண்டுமுறை மோஹினி அவதாரம் எடுத்தாரம்...பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது அசுரர்களை மயக்க ஒரு முறையும், மகிஷனை வதம் செய்த ஐயப்பனை உலகுக்கு தர ஒரு முறையும். அந்த வேறுபாடுகளே இந்த சிலை உறுவங்களில் துல்லியமாக வேறு படுத்திக் காட்டியிருப்பதாக...உண்மையா தெரியாது ஆனால் இது போன்ற லோக்கல் கதைகள் நமது புராணங்களுக்கு மேலும் சுவை கூட்டத்தான் செய்கின்றன.

6.வீனஸ் சிலையின் வயிற்று மடிப்புகள் போன்றவை துல்லியமாக சித்தரிக்கப் பட்டிருப்பது போலவே மோஹினியின் வயிற்று மடிப்பு, கை நரம்புகள்,கையிலுள்ள / மற்ற ஆபரணங்கள் போன்றவற்றை துல்லியமாக வடிவமைத்திருப்பது அந்தக் காலத்தைய நமது சிற்பக்கலை தேர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.


இதைப்போல் முருகன்,விநாயகர்,திருவிக்ரமர்,ரதி, மன்மதன்,பத்துத் தலையுடன் கூடிய ராவணன், வாலி, சுக்ரீவன், அனுமன் ,காளி என ஏகப்பட்ட சிற்பங்கள் மற்றும் குடுமியன் மலை என்ற பெயர்க்காரணம்,கர்நாடக சங்கீதத்தின் மூலம் (basic rules) பற்றியதான விரிவான கல்வெட்டுக்கள் (இது வரை குடுமியன் மலை கல்வெட்டுக்கள் மட்டுமே கர்நாடக இசைக்கு மூலாதாரமாக கிடைத்த பழமையான எழுத்து வழி வரலாற்று ஆவணங்கள் என்று கூறப்படுகிறது),இந்தக் கோவில் கஷ்டத்தில் இருக்கும் போது ஒரு தாசி இதை விலைக்கு வாங்கி பின் ஊருக்கு தானமளித்தது, கோவிலில் தாசி கட்டிய மண்டபம், மலையின் மேல் உயரத்தில் உமையாள் சகித ரிஷப வாகனத்தில் சிவன் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் சேர்ந்தார் போல் சிலையாக செதுக்கப்பட்டிருக்கும் ஆச்சரியங்கள் என பல சுவையான விஷயங்கள்,தகவல்கள்,வரலாறுகள் குடுமியன்மலைக்கு உண்டு.

அவை பற்றி புகைப் படங்களுடன் விரிவாக மற்றொரு பதிவில் :)

அன்புடன்...ச.சங்கர்

Tuesday, April 24, 2007

Saturday, April 07, 2007

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் --All the Best

அரவாணிகளின் வாழ்க்கை குறித்து "கருவறைப் பூக்கள்' படம் தயாரிப்பு

சென்னை: அரவாணிகளின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் வகையில் "கருவறைப் பூக்கள்' என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியாக தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்ற நிஜமான அரவாணி நடிக்கிறார். திரைப்படங்களில் அரவாணிகளை கேலி செய்யும் காட்சிகளும், அரவாணிகளை வில்லன், வில்லி வேடங்களில் சித்தரிக்கப்படும் காட்சிகளும் தான் இடம் பெற்றுள்ளது. தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக அரவாணிகளின் வாழ்க்கை முறை, உளவியல் , உடல்ரீதியான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் "கருவறைப் பூக்கள்' என்ற திரைப்படம் விரைவில் தயாராகவுள்ளது. இப்படத்திற்கு லுõர்து சேவியர் என்பவர் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். படத்தின் கதாநாயகிக்கு அரவாணி வேடம் என்பதால் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்ற நிஜமான அரவாணியான லிவிங் ஸ்மைல் என்பவர் நடிக்கிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

படத்தில் கதாநாயகியாக நடிக்கும் லிவிங் ஸ்மைல் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

அரவாணிகளை ஆண், பெண் என்று தான் தமிழக அரசு பிரித்து பார்க்கிறது. எங்களை, "மாறிய பாலினம்' என்று அழைப்பதற்கு அரசு உத்தரவு வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். பணிகள் இல்லாத காரணத்தினால் பிச்சை எடுக்கவும், விபசாரத்தில் ஈடுபடவும் அரவாணிகள் தள்ளப்படுகின்றனர். அரசுக்கு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும், அரவாணிகளும் மனிதர்கள் தான், அவர்களாலும் சமுதாயத்தில் சாதனைகளை படைக்க முடியும் என்ற கருவை மையமாக வைத்தும் இந்த படம் தயாரிக்கப்படுகிறது.

இவ்வாறு லிவிங் ஸ்மைல் கூறினார்

நன்றி : தின மலர் 08-04-07(ஞாயிறு)

அன்புடன்...ச.சங்கர்

Sunday, March 18, 2007

தலைவர் ரஜினி Vs மானேஜ்மன்ட் & மார்கெட்டிங்



தலைவர் காலேஜுல படிச்சாரோ இல்லியோ தெரியாது...அவர் படத்துல வர்ர பன்ச் டயலாக்கைத்தான் MBA வுல டையைக் கட்டிக்கிட்டு ப்ரொபஸருங்க சொல்லிக் குடுக்குறாங்க...என்ன நம்பலியா ?

கீழே சாம்பிள் குடுத்துருக்குது..நீங்களே படிச்சுப் பாருங்க

தலைவர் பன்ச் 1:(பாட்ஷா)

“ கண்ணா நான் யோசிக்காம சொல்ரதில்லை ...சொல்லிட்டு யோசிக்கிறதில்லை

Management Lesson:

Planning is absolutely important and having planned there is no need for any re confirmation in the attainment of the objective.


தலைவர் பன்ச் 2 :(16 வயதினிலே)

" இது எப்படி இருக்கு "

Management Mantra:

Getting the opinion of the downline is very important for any top management. This makes an organisation very democratic”


தலைவர் பன்ச் 3 :(தர்மத்தின் தலைவன்)

"நான் தட்டிக் கேட்பேன் ...ஆனா கொட்டிக் குடுப்பேன் "

Management mantra:

The top management can demand and at the same time reward probably thru Incentives and ESOPs


தலைவர் பன்ச் 4 :(அருணாசலம்)

(ஆண்டவன்) சொல்ரான்....(அருணாசலம்) செய்றான்

Management Mantra:

These two words just are good enough to understand the importance of Delegation and Implementation.both are very important to any professionally managed company.


தலைவர் பன்ச் 5 :(பாட்ஷா)

" நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி "

This is a peculiar statement which may even put Peter Drucker to feel small.

Management Mantra:

In less than 10 words, he narrates the importance of proper communication skills and listening skills. There should always be clarity and authority in what the management says and the there should be no room for any misinterpretation. Also if the listening skill is well established, we can avoid waste of time and efforts in communicating the same subject thru phone, mails, memos etc..


தலைவர் பன்ச் 6 :(பாபா)

" நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் "

Management Mantra:

Even if there is delay in rolling out a product or service, we need to ensure that we deploy the latest methods and technology.This is important to all industries.


தலைவர் பன்ச் 7 :(பாபா)

" அசந்தா அடிக்கிறது உங்க ஸ்டயில்...அசராம அடிக்கிரது பாபா ஸ்டயில் "

Management Mantra:

It is very important to be pro active than reactive. This is particularly important for Telecom and Credit card companies. You need to be launching pleasant surprises to the consumers before the competitor knows about them.


தலைவர் பன்ச் 8 :(படையப்பா)

" என் வழி தனி...வழி "


Management mantra:

“ You need to be different to succeed. Don’t choose a me too line of business.



என்ன இப்பவாச்சும் நம்புறீங்களா...அதான் சொல்ரேன் MBA வுல நல்ல மார்க் வாங்கணுமா...தலைவர் படத்தை தவறாம பாருங்க...வர்டா....



அன்புடன்...ச.சங்கர்

Tuesday, March 13, 2007

Zimbly மலையாளி

இதை எப்படிங்க தமிழ்ப்படுத்துறது...அதான் அப்படியே


1) Name the wonly part of the werld, where Malayalis don't werk hard?

Kerala

2) Why did the Malayali buy an air-ticket?

To go to Thuubai (dont break ur heads its... Dubai ), zimbly to meet
his ungle in the Gelff (Gulf).

3) Why do Malayali's go to the Gelff?
To yearn meney.

4) What did the Malayali do when the plane caught fire?
He zimbly jembd out of the vindow.

5) Why did the Malayali go to the concert in Rome ?
Because he wanted to hear pope music.

6) What is Malayali management graduate called?
Yem Bee Yae.

7) Why did his wife divorce him?
Because he was louwing another woman.

8) Who found out that?
His aandy.

9) What does a Malayali do when he goes to America ?
He changes his name from Karunakaran to Kevin Curren.

10) What does a Malayali use to commute to office everyday?
An Oto.

11)Who is Malayali's fyamousu eactor and aectress?
Geedha, Revadhi, Zilgsmidha end Ambiga.



VEERY VEERY IMBORDANT


mail to:
10 Malayalis & you will receive cocunod oil
20 Malayalis and you will receive benena chips
40 Malayalis you will receive appams
100 Malayalis and you will get free land near the rice field behind the
lungi factory with additional incentive of a whole mondh's supply of
cocunud oil and benena chips free ...



அன்புடன்...ச.சங்கர்

Friday, February 16, 2007

நன்றி Any indian . Com

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு போன போது எனி இந்தியன்.காம் புத்தகக்கடை ஸ்டால் நம்பர் 326 க்கும் போயிருந்தேன் (13/1/07)

பரிசுப்போட்டி அறிவிச்சிருப்பாங்க போலிருக்கு..குலுக்கல் முறையில் முதல் பரிசு உங்களுக்கு அப்படீன்னு மெயில் வந்தது.

எனி இந்தியன்.காம் தளத்திற்குப் போய் உங்களுக்கு தேவையான (குறிப்பிட்ட தொகைக்குள்தான் :)) புத்தகங்களை தேர்ந்தெடுத்து மடல் அனுப்புங்க.பரிசு புத்தகங்களை 2/3 வாரங்களுக்குள் அனுப்பி வைக்கிறோம் அப்படீன்னு மடல் வந்தது.

நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள்

ரப்பர்---------------------ஜெயமோகன்
சாயாவனம்-----------------ச.கந்தசாமி
ஒரு வயல் வெளியின் கதை---சூர்யகாந்தன்
அநாமதேயக்கரைகள்-------சதாரா மாலதி

புத்தகங்களை தேர்ந்தெடுத்து மடல் அனுப்பிய 2 நாட்களுக்குள் குரியரில் அனுப்பி வைத்து விட்டார்கள்.

சூப்பர் பாஸ்ட் சர்வீஸ்....ரொம்ப தாங்ஸுங்கோவ்

அன்புடன்...ச.சங்கர்

Friday, February 09, 2007

தமிழ் பூமிக்கு நீர் கொண்டு வா

கடந்த சில மாதங்களாகவே வரிசையாக முல்லை பெரியார், காவிரி, பாலாறு என நதி நீர் பிரச்சினைகள் தலைப்புச் செய்திகளை விடாமல் பிடுத்துக் கொண்டிருக்கின்றன.

அண்டை மாநிலம் (ஞாயமாகவோ அநியாயமாகவோ) நீர் தராததற்காக குறை பட்டுக்கொண்டு நாம் இந்திய இறையாண்மை, தேச ஒருமைப்பாடு பற்றியெல்லாம் தேவையா என வினா எழுப்புகிறோம் (என்னையும் சேர்த்துத்தான்)

ஆனால் இதிலெல்லாம் இந்திய ஒருமைப் பாட்டை ஒரு தமிழர் நிலையிலிருந்து சிந்திக்கின்றோம். ஒருகேரளர்,ஆந்திரர் அல்லது கன்னடர் நிலையிருந்தால் நமது பார்வை இவ்வாறாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

இங்கு நான் சரி தவறு என்பது பற்றி பேசவில்லை .நிலைபாட்டைப் பற்றி பேசுகிறேன்.

இது பற்றி எனக்கு மேலும் தோன்றும் சில சிந்தனைகள்.

இதற்கு நிரந்தரத் தீர்வு சண்டையில் இல்லை.I'll make an offer which even your mother cannot resist என்று ஆங்கிலப் படத்தில் ஒரு வசனம் வரும்.அதுபோல உரிமை,நிலவரம்,தேச ஒருமைப்பாடு,இறையாண்மை என்பதெல்லாம் விட்டு நல்ல ஒரு ஒப்பந்தத்தின் மூலமே...அந்த ஒப்பந்தத்தை (கடை பிடித்தால் நீர் கொடுக்கும் மாநிலத்துக்கு நல்ல லாபம் இல்லையேல் பெருத்த நஷ்டம் என்பது போல்) செய்தால்தான் இதற்கு நிரந்தர தீர்வு பிறக்கும்.

இப்படி சிந்திப்போமே..ஆண்டாண்டு காலமாய் சண்டையிடுவதை விட்டு..காவிரி தமிழகத்தில் ஓடவில்லையெனில் விவசாயத்திற்கும் பாசனத்திற்கும் குடிநீருக்கும் என்ன செய்வோம் என்று யோசித்து அதனடிப்படையில் என்ன திட்டங்கள் தேவையோ அதை செயல் படுத்துவதே இன்றைய தமிழகத்தின் தலையாய கடமை.அதை விடுத்து கோர்ட் கேஸ் என அலைவதெல்லாம் கண்துடைப்பாக இருக்குமே அன்றி மக்களுக்கு நல்ல விடிவை/நிரந்தர தீர்வை அளிக்காது.இது பாலாறு, முல்லை பெரியார் அனைத்திற்கும் பொருந்தும். தண்ணிரே இல்லாத அரபு தேசங்களும் பாலை வனங்களும் முன்னேறவில்லையா? அங்கு பெட்ரோல் வளம் என்று சொல்லாதீர்கள்..தமிழகத்திலும் தொழில் வளர்ச்சி, கட்டுமானம், கல்வி போற முன்னேற்றங்கள் நிறைய இருக்கிறது...முதலில் நம்மிடம் உள்ளவற்றை நாம் சரியாக பயன்படுத்துவோம்.

காவிரி.பாலாறு,முல்லை பெரியார் என நதி பங்கீட்டில் நம் உரிமைக்காக போராடும் அதே நேரத்தில் மழை நீரை சேகரிப்பது, நிலத்தடி நீரை அதிகரிக்கத் திட்டங்கள்,கடல் நீரை மாற்றும் திட்டம், நீரை வீணடிக்காத வகையில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ,நீர் ஆதாரங்கள் , ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை, ஆறுகளில் கழிவு நீரை கலந்து கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளுக்கு கடும் நடவடிக்கை போன்றவற்றில் கவனம் செலுத்தி நேர்மை தவறாமல் பாரபட்சமின்றி ஆட்சியாளர்கள் நடந்து கொண்டாலே நாம் தண்ணீருக்காக அடுத்த மாநிலத்திடம் கையேந்தும் அவசியமே வராது.அவர்களே உங்களுக்கு நாங்கள் தண்ணீர் தருகிறோம் எங்களுக்கு இது தாருங்கள் அது தாருங்கள் என நம்மிடம் நிறைந்துள்Lள்aஅ செல்வங்களுக்காக யாசிக்கும் நிலை வரும்.


அடுத்தவரிடம் நாம் கையேந்துவதை கடமையாகவும் உரிமையாகவும் நினைத்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது...அது அழிவின் ஆரம்பம்..ஆனால் தமிழகத்தில் தண்ணீரைப் பொருத்தவரை அதுதான் நடந்து கொண்டிருக்கிறது...சீக்கிரம் விழித்துக் கொண்டால் நமக்கு நல்லது .

அன்புடன்...ச.சங்கர்

Tuesday, February 06, 2007

கண்ணால் காண்பதும் பொய்.....







மெயிலில் வந்தது...உங்கள் பார்வைக்கு


மீதி போட்டோக்களின் மீது மவுசை வைத்து கிளிக்கி பார்த்துக் கொள்ளுங்கள் :)

வெள்ளைச்சாமி

கிருஸ்மஸ¤க்கு முதல்நாள் இரவு .. வெள்ளைச்சாமி தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தான்.வெள்ளைச்சாமிக்கு 9 வயது .கடந்த மூன்று மாதமாக பட்டணத்தில் ஜெயகுமார் கதிரேசன், யெஸ்தர் மேரியின் வீட்டில் எடுபிடி பையனாக வேலை பார்க்கிறான்.

முதலாளி மனைவியுடனும் மற்ற வேலையாட்களுடன் சர்சுக்கு போவதற்காய் காத்திருந்து , பின் மெதுவாக முதலாளியின் மேசையை திறந்து ஒரு பேனாவை எடுத்தான்.தனக்கு முன்னால் ஒரு கசங்கிய காகிதத்தை விரித்து வைத்து எழுதத் தொடங்கினான்.

எழுத ஆரம்பிக்கும் முன்னதாக மீண்டும் ஒரு முறை பயத்துடன் சுற்று முற்றும் பார்த்தான். சலனமற்றிருந்த கதவுகளும்,சன்னல்களும்,பீரோக்களின் இருட்டு மூலைகளும் யாருமற்ற அவன் தனிமையை உறுதிப் படுத்த சின்ன நிம்மதிப் பெருமூச்சுடன் எழுத ஆரம்பித்தான்.

அன்புள்ள தாத்தா மாரிக்கு,
வெள்ளைச்சாமி எழுதும் கடிதம்.
தாத்தா...அப்பா அம்மா இல்லாத எனக்கு நீதான் எல்லாம்.நீ நல்லா இருக்கியா ?

எழுத ஆரம்பித்தவன் சிறிதளவே கண்ணை உயர்த்தி தனக்கு முன்னால் உள்ள சிலையில் பிரதிபலிக்கும் மெழுகுவத்தியின் ஒளியை பார்த்தான். மனதில் தாத்தாவின் உருவம் ஒரு அறுந்த நூலாம்படை போல் லேசாக அசைந்தது.

தாத்தாவுக்கு 65 வயது. ஒல்லியான தேகம்தான் என்றாலும் மிகவும் சுறுசுறுப்புமானவர்.எப்பொழுதும் சிரித்த முகமாக வளைய வருவார்.ஊரில் பண்ணையார் வீட்டில் காவல்காரன் வேலை.
பகலெல்லாம் குடிசையில் தூங்குவார் அல்லது பண்ணையார் வீட்டில் வேலை செய்யும் பெண்களிடம் குறும்பாக பேசி சீண்டிக் கொண்டிருப்பார்.இரவானால் ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டு கம்பைத் தட்டிக் கொண்டே காவலுக்கு கிளம்பி விடுவார்.கருப்பு மணியும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே வாலை ஆட்டியபடி அவர் பின்னால் புறப்பட்டு விடும். மணி பார்க்கத்தான் சாது.பழகியவர், பழகாதவர் யாரையும் கடிக்காது.ஆனால் எப்போதும் யார் வீட்டிலாவது கோழியை திருடி அல்லது யார் வீட்டு தோட்டத்த்லாவது புகுந்து என்று வாரத்துக்கு ஒரு முறையாவது செத்துவிடுமோ என்கிற அளவுக்கு "நாயடி " படும். ஆனாலும் ஒவ்வொரு தடவையும் எப்படியோ பிழைத்து வந்து விடும்.

இந்நேரம் தாத்தா கிராமத்து சர்ச்சுக்கு முன்னால் நின்று வேலியைப் பிடித்துக் கொண்டு கையிலிருக்கும் கம்பால் செருப்பில் ஒட்டியிருக்கும் ஈர மண்ணை தட்டிக் கொண்டிருப்பார்.குளிரில் உடம்பை ஒடுக்கிக் கொண்டு பண்ணையில் பத்து பாத்திரம் தேய்க்கும் முனியம்மாளிடம் " என்ன தாயி..பொடி போடுரையா " என்று பொடி மட்டையை நீட்டுவார்.
முனியம்மாள் ஒரு சிட்டிகை பொடியை எடுத்து மூக்கில் வைத்து உறுஞ்சி பொடியின் காரத்தால் ஊகாரமிட்டு தொண்டை செருமும் போது " நல்ல காரமுல்லா " என்று சொல்லி பெருமிதத்துடன் சிரிப்பார்.
சில சமையம் தாத்தா மணியின் மூக்கில் பொடியை தூவி விட்டு சிரிக்க அது கோவத்துடன் தலையை ஆட்டிக் கொண்டே நகர்ந்துவிடும். ஆனாலும் பழக்க தோஷத்தால் குலைக்காமல் வாலை மட்டும் ஆட்டிக் கொண்டே போகும்.
உடலை இம்சிக்கும் இன்பமான குளிர், புல்லின் மேல் லேசாகப் படர்ந்த பனி, நிலா வெளிச்சத்தில் தெரியும் வீடுகள், வானத்தில் கொல்லென்று பூத்து கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் என்று கிராமத்தில் டிசம்பர் இரவு அருமையாக இருக்கும்

வெள்ளைச்சாமி நினைவலையிலிருந்து விடு பட்டு மீண்டும் பெருமூச்சு விட்டபடி எழுதுவதை தொடர்ந்தான்
" தாத்தா நேத்து நா சின்னப் பாப்பாவை தொட்டில்ல போட்டு ஆட்டிக்கிடே இருக்கும் போது என்னையறியாம தூங்கிட்டேனா.திடீர்னு பாப்பா முளிப்பு தட்டி சிணுங்கிச்சு .பாப்பாவை ஏண்டா அள விட்ட அப்படீன்னு எனக்கு செமத்தியாக அடி விளுந்திச்சு.மொதலாளி என்னை தலை மயிரை பிடிச்சு தரதரன்னு ரோட்டுக்கு இழுத்து வந்து மிதி மிதின்னு மிதிச்சுட்டாரு.அப்புறமும் கோபம் தீராம பெல்ட்டால வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு.இப்பமும் எளிதிக்கிட்டு இருக்கும் போது கையில பெல்ட் பட்ட இடம் விண்ணுனு வலிக்குது.

இப்பிடித்தான்...போன வாரம் வீடு தொடைக்கும் போது... சரியா தொடைக்கலைன்னு சொல்லி மொதலாளியம்மா அழுக்கு தண்ணியை என் மூஞ்சில வீசியடிச்சாங்க.இதைப் பாத்து டிரைவரு ,தோட்டக் காரரு, மத்த எல்லாரும் விளுந்து விளுந்து சிரிச்சாங்க.எனக்கு அளுகை அளுகையா வந்துச்சு.ஆனா அவங்க முன்னாடி அளக்கூடாதுன்னு பேசாம நின்னேன்.ஆம்பளப் புள்ள அளுவக்கூடாது அப்படீன்னுட்டு நீ தான தாத்தா அடிக்கடி சொல்லுவ.நல்ல வேளையா மூஞ்சில அவங்க ஊத்துன அளுக்கு தண்ணி வளிஞ்சுக்கிட்டு இருந்ததால கண்ணுல மளுக்குனு கட்டுன தண்ணியை யாரும் பாக்கலை.

அப்பப்ப டிரைவரு ,தோட்டக் காரரு இவங்க குடிக்க சாராயம் வாங்கியார என்னை அனுப்புவாங்க..அப்படியே சமையக்கட்டுல போயி திங்குறதுக்கு எதுனா திருடிக்கிட்டு வந்து தர சொல்லுவாங்க.செய்யலைன்னா அடிப்பாங்க.

சாப்புடறுதுக்கு எனக்கு பளைய சோறு தவிர வேர ஒண்ணும் கிடைக்காது.வீட்டுல ஓரமா நடை பாதையிலதான் படுத்து தூங்குறேன்.அதுவும் ராத்திரி குழந்தை முளிச்சிக்கிட்டு அளுதா என் தூக்கம் அம்புட்டுதான்.

தாத்தா..என்னிய இக்கிருந்து எப்படியாச்சும் கிராமத்துக்கே கூட்டிக்கிட்டு போயிருங்க...உங்க காலைப் பிடிச்சு கெஞ்சி கேக்குரேன்..என்னால இங்க தாங்க முடியலை...அளுகை அளுகையாவருது ...நீங்க எப்படியாவது கூட்டிக்கிட்டு போலையின்னா நா செத்தே போயிருவேன்"

எழுதும் போதே வெல்ளைச்சாமியின் கண்களில் கண்ணீர் முட்டி நெஞ்சிலிருந்து ஒரு கேவல் புறப்பட்டது.கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுக்கு படிந்த புறங்கையால் துடைத்துக் கொண்டே மேலும் எழுதினான்.

" தாத்தா..அங்க வந்து நான் உங்களுக்கு வெத்தலை இடிச்சு தாறேன்...உங்களுக்கு பிடிக்காத எதுனா செஞ்சா என்னை அடிங்க..மிதிங்க... வேலை எதுவும் இல்லாம சும்மா இருக்கேன்னு நெனைச்சீங்கன்னா மாடு மேய்க்க கூட போயிட்டு வாரேன்..அதுவுமில்லையின்னா கெஞ்சி கூத்தாடி பண்ணையார் வீட்டில மாட்டுக் கொட்டாயில சாணி அள்ளுறேன்.ஆனா இங்க என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது.கிராமத்துக்கு ஓடி வந்துரலாமுன்னு பாத்தா கையில காசில்லை. நடந்தே வர வளி தெரியாது.தாத்தா நான் பெரியவனாயிட்டா உன்னை வச்சு நல்லா காப்பாத்துவேன்..நீ செத்துட்டியானா உனக்காக நான் பிரார்த்தனை பண்ணுவேன்..எங்க அம்மாவுக்கு பண்ற மாதிரி.என்னை எப்படியாவது இங்கிருந்து கூட்டிக்கிட்டு போயிரு".

"அப்புறம் தாத்தா....இங்க பட்டணம் கிராமத்தை விட ரொம்ப பெருசா இருக்கு..நெறைய ரிக்சா,ஆட்டோ,பஸ்ஸெல்லாம் ஓடுது...இங்க சின்னப் பசங்க டயரு உருட்டி வெளையாட மாட்டேங்குறாங்க...அளகளகா சைக்கிள் விட்டுக்கிட்டு போறாங்க..இங்க கடையில .தொட்டில அழகழா மீனு வச்சுருக்காங்க...நா ஒரு நா கடத்தெரு வளியா போகும் போது பாத்தேன்.அப்புறம் கசாப்பு கடையில ஆடு ,மீனு, கோளி, முயலு நம்ம ஊர்ல புடிப்பமே காடை அதெல்லாம் கூட விக்கிறாங்க...பாத்தேன்...எங்கேருந்து பிடிச்சுக்கிட்டு வருவாங்களோ தெரியாது.அப்புறம் தாத்தா...ஊருல பொங்கப் பானை வச்சு சாமி கும்பிடும் போது எனக்கு தனியா ஒரு கரும்பு எடுத்து வச்சுரு.யாரு கேட்டா எம் பேரனுக்கு..வெல்ளைச்சாமிக்கு அப்படீன்னு சொல்லிரு..யாருக்கும் வெட்டி குடுத்துராத".

வெள்ளைச்சாமிக்கு மீண்டும் பெரு மூச்சு வந்தது...பொங்கலுன்னா தாத்தா கூட காட்டுக்கு .மஞ்சக் கெழங்கு ..பூளைப் பூ செடி எல்லாம் புடுங்கிட்டு வர போறது ஞாபகம் வந்திருச்சு.தாத்தா இவனையும் கூடவே கூட்டிக்கிட்டு போயிருவாரு..தாத்த காட்டுக்குள்ளார போகும் போது சத்தம் போட்டுக்கிடே போவாரு.கட்டுலேருந்து வித விதமா பறவைங்க கத்துற சத்தம் வரும்.அதக் கேட்டு வெள்ளைச்சாமியும் சந்தோஷமா சத்தம் போட்டுக்கிடே போவான்.போகும் போது எங்கிட்டிருந்தாவது முயலோ...காடையோ விருட்டுன்னு ஓடும்.."பிடி..பிடி ன்னு தாத்தாவும் பேரனும் துரத்திக்கிட்டே ஓடுவாங்க..சில சமையம் பிடி படும்..பல சமையம் ஓடிரும்..அப்பல்லாம் தாத்தா..களவாணிப் பய புள்ள ..ஓடிருச்சு" அப்படீன்னு சொல்லிக்கிட்டே வெள்ளைச்சாமியைப் பார்த்து சிரிப்பாரு.தாத்தா மஞ்சக் கெழங்கு, மாவிலை , பூளைப் பூ எல்லாம் பறிச்சுட்டு பண்ணியார் வீட்டுக்கு வந்ததும் பொங்கலுக்கு தோரணம் கட்ட ஆரமிச்சுருவாரு...வெள்ளைச்சாமி அம்மா ராக்காயி இருந்த போது அவளும் பண்ணயார் வீட்டுலதான் வேலை செஞ்சா. பண்ணையார் வீட்டுல வேலை செய்யிற பூவாயி அக்காதான் வெள்ளைச்சாமிக்கு ரொம்ப பிடிச்ச அக்கா.எப்பவும் சுறு சுறுன்னு ஏதாவது செய்துகிட்டே இருக்கும்..இவனுக்கு திங்கிறதுக்கு ஏதாவது பண்டம் கொண்டு வந்து குடுக்கும்.ஒரு வேலையும் இல்லாத நேரத்துல வெள்ளைச்சாமிக்கு எழுதப் படிக்க கத்துக் குடுத்ததும் பூவாயி அக்காதான்.அம்மா செத்தப்புரம் கொஞ்ச நாள் பண்ணையார் வீட்டு சமையல் கட்டுல எடுபிடியா இருந்தான்.அப்புறம் அவனை பட்டணத்துக்கு அனுப்பிட்டாங்க.

வெள்ளைச்சாமி தொடர்ந்து எழுதினான். " கண்டிப்பா வந்துருங்க தாத்தா..வந்து என்னை கட்டாயம் கூட்டிக்கிட்டு போயிருங்க " " இங்க ரொம்ப அடிக்கிராங்க..சாப்பாடு போட மாட்டேங்கிறாங்க..சொல்ல மறந்துட்டனே ...ஒரு நா மொதலாளி என் தலைல படார்னு அடிக்க நான் மயக்கமாயி விழுந்துட்டேன்..தாத்தா இந்த எடத்துல இருந்து எப்படியாவது என்னை கூட்டிக்கிட்டு போயிரு..நம்ம கிராமத்துல பேச்சி கிழவி,பொன்னாத்தா,ராசப்பன் எல்லோரையும் கேட்டதா சொல்லு..மணி இன்னும் இருக்கா ?

இப்படிக்கு உன் அன்புள்ள பேரன் வெள்ளைச்சாமி ..எழுதி முடித்த பின் " தாத்தா..கண்டிப்பா வந்துருவல்ல." என்று பின் குறிப்பாக எழுதினான்.எழுதிய பேப்பரை நாங்காக மடித்து முந்தைய நாள் வாங்கி வைத்திருந்த கவரில் போட்டு ஒட்டினான்.பின் கொஞ்சம் யோசித்து கவரின் மேல் முகவரியை எழுதினான்.

"கிராமத்திலி இருக்கும் மாரி தாத்தாவிற்கு " பிறகு கொஞ்சம் தலையை சொரிந்தவாறு யோசித்து கீழே " முத்து மாரியப்பன்" என்று தாத்தாவி முழுப்பெயரையும் எழுதினான்.அதற்கு மேல் எழுத தெரியவும் இல்லை ...தோன்றவும் இல்லை .பிறகு கவரை எடுத்துக் கொண்டு போட்டிருந்த கிழிந்த அரைக்கை பனியனுடனே தெருவுக்கு ஓடினான்.

முதல் நாள் நாட்டார் கடையில் கவர் வாங்கிய போது நாட்டார் அவனுக்கு எப்படி தபாலை போஸ்ட் பாக்ஸிலிருந்து தபால்காரர் எடுத்துக் கொண்டு தபாலாபிஸிற்கு கொண்டு போய் அங்கிருந்து அது மெயில் வண்டி மற்றும் புகை வண்டியில் பயணப்பட்டு அவன் ஊருக்கு போய் சேர்ந்து அங்குள்ள தபால்காரர் அதை எடுத்துக் கொண்டுபோய் அவன் தாத்தாவிடம் கொடுப்பார் என்று சொல்லியிருந்தார்.

அதை நினைத்துக் கொண்டே புன் முறுவலுடன் வெள்ளைச்சாமி அந்த விலை மதிப்பில்லாத கடிதத்தை அங்கிருந்த சிவப்பு தபால் பெட்டியினுள் போட்டான்..

ஒரு மணி நேரம் கழித்து கடிதத்தின் நம்பிக்கை தந்த நிம்மதியில் வெள்ளைச்சாமி அமைதியாக தூங்கப் போனான்.

அவன் கனவில் போகியன்று கொளுத்தும் நெருப்பு தக தகவென்று எரிந்து கொண்டிருந்தது.நெருப்பின் அருகே தாத்தா காலாட்டிய படி அமர்ந்து பூவம்மாளுக்கும்,பொன்னாத்தாளுக்கும் வெள்ளைச்சாமியின் கடிதத்தை படித்துக் காட்டிக் கொண்டிருந்தார்.அவருக்கு அருகில் மணி வாலாட்டிய படி படுத்திருந்தது.நிறைய சிறுவர்கள் கையில் பறை வைத்துக் கொண்டு டப்..டப் என்று அடித்தவாறு நெருப்பை சுற்றி சுற்றி குதித்த படி வந்தனர்.அனைவரது முகமும் வெள்ளைச்சாமி முகமாகவே இருந்தது.