Tuesday, October 24, 2006

சில மரண தண்டனை செய்திகள்

அப்சலின் தாக்கம்தான் இந்தப் பதிவும்



உலகில் 120 நாடுகளில் மரண தண்டனை அமலில் இல்லை
அமலில் இருக்கும் 76 நாடுகளில் இந்தியாவும் ஒன்று

இந்தியாவில் 1947-ல் இருந்து இதுவரை தோராயமாக 55 மரண தண்டனைகள் நிறைவேற்றப் பட்டிருக்கும் என நம்பப் படுகிறது. ஆனால் உண்மையான எண்ணிக்கை ஆயிரங்களில் இருக்கும் என மனித உரிமைக் குழுக்கள் கணிக்கின்றன.

உச்ச நீதிமன்றம் "அபூர்வத்திலும் அபூர்வமான" வழக்கில் மட்டுமே மரண தண்டனை விதிக்கலாம் என்று குறிப்பிட்டாலும் "அபூர்வத்திலும் அபூர்வமான" என்பதற்கான எந்த ஒரு வரை முறையும் குறிப்பிடப் படவில்லை.

பெரும்பாலும் தூக்கு கயிற்றாலும் சில சமயம் "ஃபையரிங் ஸ்குவாட்" எனப்படும் துப்பாக்கி ஏந்திய காவலர் சுடுவதின் மூலமும் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

1983-ல் தூக்கிலிடுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பெற்றவரை தூக்கிடுவதில் சித்திரவதையோ,காட்டுமிராண்டித்தனமோ,கேவலப்படுத்துதலோ அல்லது கீழ்மைப்படுத்துதலோ இல்லை என குறிப்பிட்டுள்ளது.



இந்தியாவில் கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டவர் தனஜ்சய் சாட்டர்ஜி (படம்) தண்டனை விதிக்கப்பட்டு (ஆகஸ்ட் 1991) 13 வருடங்கள் கழித்து கோல்கத்தா அலிபூர் சிறையில் 2004-ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் காலை 4.30 மணிக்கு தூக்கில் தொங்கவிடப்பட்டார்.

தனஞ்சய் செய்த குற்றம்..கோல்கத்தாவில் சிறு பெண்ணை கற்பழித்து கொன்றது.(நடந்ததாக கூறப்படும் நாள்05-03-1990)


கொசுறு செய்தி : அமெரிக்காவின் உடா(Utah) மாஹாணத்தில் முன்பு "ஃபையரிங் ஸ்குவாட்" எனப்படும் துப்பாக்கி ஏந்திய காவலர் சுடுவதின் மூலமும் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டு வந்தது... 5 காவலர் வரிசையில் நின்று சுடுவர்(படத்தில் 8 பேர் :) )...இதில் ஒருவர் சுடும் துப்பாக்கியில் மட்டும் "Blank" தோட்டாக்கள் இருக்கும்.இந்த முறையில் உயிர் குடித்த தோட்டா எந்தத் துப்பாக்கியில் இருந்து வந்தது என்பது யாருக்கும் தெரியாது என்பதற்காக.
அங்கு இப்போது "ஃபையரிங் ஸ்குவாட்"முறை ஒழிக்கப்பட்டு புதிதாக விதிக்கப்பட்ட எல்லா மரண தண்டனைக்கும் விஷ ஊசிதான் !!!


அன்புடன் ச.சங்கர்

3 comments:

ச.சங்கர் said...

test

enRenRum-anbudan.BALA said...

Sharing some dramatic data !!!

ச.சங்கர் said...

வருகைக்கு நன்றி பாலா