Friday, August 18, 2006

கேள்வியும் பதிலும்


வலையுலகுல தலைங்களெல்லாம் கோக்கு மாக்கா ஒருத்தரப் பாத்து ஒருத்தர் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்காங்களா

அதான் நாம கேள்வி கேக்குறதப்பத்தி ஒரு பதிவு போடலாமுனுட்டு....

ஊருல எல்லா சனமும் கூடி கருப்புக்கு.... அட """கருப்ப சாமிக்குங்க"" பொங்கல் வச்சுக்கிட்டு இருந்தாக

கோபாலும் கோயிந்தனும் சாமி கும்புடறதுக்காக நின்னுக்கிட்டு இருந்தாங்க..

செம குளுரு...கோயிந்தனுக்கு தம்மு வலிக்கணும் போல இருந்திச்சு....கோபாலு கிட்ட கேட்டான்...

கோவாலு ... "தோ போரார் பார்...ஊர் பெரியவர்...அவரு கிட்ட கேளு " அப்படீன்னான்.....

கோயிந்தனும் போயி "அய்யா ...சாமி கும்பிடும் போது தம் வலிக்கலாமா " அப்படீன்னு கேட்டான்.

பெரியவர் அவன ஒரு மாதிரி பாத்து" தம்பி சாமி கும்புட சொல்ல சிகரெட் புடிக்கிறது தப்பு " அப்பிடீன்னாரு. கோயிந்தன் வெறுத்து போய் திரும்ப வந்தான்...

கோவாலு "என்னா மேட்டரு " அப்படீன்னான்.

"பெருசு கூடாது அப்படீன்னுருச்சுபா " ன்னுட்டு கோயிந்தன் சொன்னான்.

"இதா மேட்டரு..நான் கேக்குறேன் பார்" அப்படீன்னுட்டு பெரியவர் கிட்ட போய் " ஐயா...சிகரெட் பிடிக்கும் போது சாமி கும்புடலாமா" அப்படீன்னு கேட்டான்..

பெரியவரும் சந்தோசமா " கண்டிப்பா.....சாமி கும்பிட நேரம் காலம் பாக்க வேணாம்..எப்ப வேணா சாமி கும்புடலாம்...அதுக்கு தடையே இல்லை" அப்படீன்னார்...

கோவாலு "அது..." அப்படீன்னு சொல்லிக்கிட்டு ஒரு தம்ம பத்த வச்சுக்கிட்டு ஸ்டயிலா நடந்து வந்தான்.

இதுக்கு பேருதான் தலைவா கேள்விய போட்டு பதில வாங்குறது அப்படீங்கரது....

அதுனால இன்னா பதிலு வேணுமோ அதுக்கேத்தா மாதிரி கேள்விய போட்டு பதில வாங்குங்க...
என்னா கரீக்டா....நான் சொல்ரது.....அப்புறமென்ன போட்டு தாக்குங்க.

அன்புடன்...ச.சங்கர்

4 comments:

நன்மனம் said...

//Åருகைக்கு நன்றி... வணக்கம் //


இது என்னங்க ஆருகைக்கு நன்றி.... வணக்கம்??????

(யாரோட கைக்கு நன்றி.... பின்னூட்டம் போடரவங்க கைக்கு தான)

ஹி...ஹி... நாமலும் கேள்வி கேக்கலாம்னு தானுங்க :-)

ச.சங்கர் said...

நன்மனம்....

உங்கள் வரு"கை" க்கும் பின்னூட்டம் போட்ட "கை"க்கும் நன்றி.

போதுமா. கேள்வி கேட்டு நெனைச்ச பதில வாங்கிடீங்க இல்ல :))

enRenRum-anbudan.BALA said...

nallArukku, sankar !

unakku kusumbu jAsthi :)

ச.சங்கர் said...

நன்ரி பாலா...எல்லாம் உன் ட்ரெயினிங்தான் :)