Friday, August 18, 2006

படித்ததில் பிடித்ததில் ரசித்தது----1

ஒரு I A S அதிகாரியின் அனுபவங்கள் / நினைவுகள்

(ஒரு ஓய்வு பெற்ற அதிகாரியின் நூலிலிருந்து, நான் ரசித்த சில பகுதிகளை என் எழுத்து நடையில் மாற்றி எழுதியுள்ளேன்...நிறைகளிருப்பின் அவருடயது...குறைகள் என் எழுத்து முதிற்சியின்மையால்..அவர் மன்னிப்பார் என்று நம்புகிறேன்)


முன்பெல்லாம் I A S பயிற்சியில் தொன்று தொட்டு கற்றுக் கொடுக்கப்படுவதில் குதிரை ஏற்றமும் ஒன்று.அதன் காரண காரியம் எதாக இருந்தாலும்...பயிற்சியில் வெறும் சவாரி மட்டுமின்றி, அதி வேகமாக நாலு கால் பாய்ச்சலில் சவாரி, கடிவாளமும், சேணமும் இல்லாத குதிரையில் அமர்ந்து வேகமாக பயணித்தல் மற்றும் உச்ச கட்டமாக நான்கடி உயரமுள்ள வேலி அல்லது குட்டி சுவரை தாண்டுதல் போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இவற்றை திருப்திகரமாக செய்து அதற்குண்டான மதிப்பெண்ணை பெறாவிட்டால் பணியில்(IAS) நிரந்தரமாக முடியாது.

பயிற்சிக்காகவென்றிருந்த குதிரைகள் மிக உயர்ந்த சாதியை சார்ந்தவை..அராபிய..பாரசீக இறக்குமதியாக கூட இருக்கலாம் .அவற்றிடம் மிக இலாவகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்..இல்லையேல் மட்டுப்படுத்தி பயணிப்பது குதிரைக்கொம்புதான்..ஆகையால் பயிற்சி ஆரம்பிப்பதே அதனிடம் எப்படி நண்பனை போல் நடந்து கொள்வது என்பதில்தான்...அதாவது ஒவ்வருவருக்கும் ஒரு ப்ரத்தியேக குதிரை தரப்பட்டு அதற்கென்று ஒரு பெயர் மற்றும் எண்(user name/password ?!!) இருக்கும்.

குதிரையை நட்பாக்கி கொள்ள முதலில் கலவரப்படாமல் அதனிடம் நோக்கி இயல்பாக நடக்க வேண்டும்..கையில் கல்கண்டோ...காரட்டோ இருந்தால் இன்னும் நலம்.அந்தக் குதிரை தலையையும் வாலையும் உடம்பையும் ஆட்டிக் கொண்டு , கண்ணில் இருக்கும் வெள்ளை தெரிய ஒரு கோணல் பார்வை பார்த்துக் கொண்டு பதட்டமாக நின்று கொண்டிருக்குமாயின்...நீங்கள் வீட்டில் சொல்லிக்கொண்டு வந்த பிறகுதான் அதன் மேல் ஏற முயற்சிக்க வேண்டும்.அப்படியில்லாமல் அது வழி மேல் விழி வைத்து பரிவுடன் உங்களையே பார்த்துக் கொண்டிருக்குமாயின் அது சாந்தமான குதிரை மற்றும் நீங்கள் """நேரம் நல்ல நேரம்...உன்னை நெறுங்கி பார்த்த நேரம் """" என்று பாடலாம் (மனதுக்குள்தான்...இல்லவிட்டால் பாட்டை கேட்டும் குதிரை மிரளும் சாத்தியக் கூறும் உண்டு)


கிட்ட போனதும் கடிவாளத்தை பிடித்துக் கொண்டு ,குதிரை கன்னத்தை?! செல்லமாக தட்டிக் கொடுத்து அன்போடு அதன் பெயரை அழைக்க வேண்டும்..பண்புள்ள பரியானால் 'பரி'தாபமாக உங்களை பார்த்துக் கொண்டு நிற்கும்...கற்கண்டோ காரட்டோ கொடுத்ததை உதட்டு முனையால் வாங்கி கரக்...முரக் என சாப்பிடும்...அதுவே பொல்லாத பரியானால் கிட்டே போகப்போக பின்னால் நகர்ந்து கொண்டே போகும்..கடிவாளம் பிடித்து கன்னத்தை தட்டப் போனால் சிலிர்து உக்ரமாகவும்...ஆங்காரமாகவும் கனைத்து கொண்டு கையை கடிக்கப் பார்க்கும்..வேண்டா வெறுப்பாக காரட்டை கவ்வும் போது கொஞ்சம் கை விரலையும் சேர்த்து பதம் பார்க்கும்.ஆக மொத்தம் அதன் மேலேரி பயிற்சி செய்ய அலாதி சூரத்தனம் வேண்டும்.


ஆரம்பமே இப்படியானால் இப்படிப் பட்ட குதிரை மேல் ஏறுவதெப்போது,சவாரி,நாலு கால் பாய்சல் ஓட்டம்,கடிவாளம்,சேணமில்லாமல் ஓட்டம் மற்றும் குட்டை சுவர் மற்றும் வேலி தாண்டுவதெல்லாம் எப்போது?!!இந்தப் பீதியிலேயே முதல் நாளே பாதிப் பேர்களுக்கு பேதியாகும்.

பயிற்சி நடை பெறும் போது பல அறிய காட்சிகளும் காணக்கிடைக்கும்...

ஒருவர் குதிரை மேலேரி நாலு கால் பாய்சலில் போகிறாரே என்று பார்த்தால்...வேறொன்றுமில்லை...எப்படியோ தட்டு தடுமாறி குதிரையில் ஏறி விட்டார்...குதிரை பாட்டுக்கு பிய்த்து கொண்டு அதனிஷ்டம் போல் பறக்கிறது...இவர் கட்டுப் படுத்த வழி வகை தெரியாமல் அதிர்ச்சியில் கல்லாய் சமைந்தமர்ந்திறுக்கிறார்..இனி குதிரையாக பார்த்து அவரை கீழே இறக்கி / தள்ளி விட்டால்தான் உண்டு.

இதோ ஒருவர் குதிரை மேல் இருக்க குதிரை முன் கால்களில் நின்று கொண்டு பின் கால்களை தூக்கி மற்றும் தட்டாமலை சுற்றி வித்தை காட்டுகிறதே..அது வேறு ஒன்றுமில்லை.பாய்ந்து சென்று கொண்டிருந்த குதிரையை நிறுத்த இவர் ஏதோ செய்யப் போக அது இப்படியான வித்தைகள் காட்ட ஆரம்பித்து விட்டது.இப்போது அவர் குடிரையின் முதுகிலிறுந்து கழுத்துக்கு வழுக்கி வந்து,இறுக் கட்டிக் கொண்டு, என்ன செய்வது என பரிதாபமாக யோசித்து கொண்டிருக்கிறார்.

இன்னொருவர் குதிரை மேல் ஒய்யாரமாய் பவனி வருவார்...ஒன்றுமில்லை பீதி நடுக்கத்தில் அவர் பட்ட / படுத்திய பாட்டைக் கண்டு பயிற்சியாளரே இருப்பதிலேயே தொத்தலான நோஞ்சான் குதிரையை அவருக்கு அளித்திருப்பார்..னது முடிந்தும் முடியாமலும் சாதுவாக போய்க் கொண்டிருக்க இவர் அதன் மோல் கலையாத பயத்துடன் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்..அவ்வளவே. சில சமயம் குதிரைகள் மேலமர்ந்து பயிற்சி செய்பவரை தூக்கிக் கொண்டு ஊருக்குள் எங்காவது ஓடி விடும்.பிற்பாடு ஒரு மணியோ..இரண்டு மணியோ கழித்து குதிரை தனியாகவும் பயிற்சி செய்தவர் தனியாகவும் சண்டை போட்டுக் கொண்ட நண்பர்கள் போல் அவரவர் இல்லம் சென்றடைவர்.

சில குதிரைகள் பேசாமல் கோயில் சிலை போல் நின்று கொண்டிருக்கும்..திடீரென்று படீர்...படீர் என்று இரண்டு மூன்று "அபான வாயுவை" பிரித்து விட்டு அதனால் மிரண்டு சரேலன ஜெட் விமானம் போல் கிளம்பும்.குதிரையின் மோல் அமர்ந்திருந்தவர் பின்பக்கமாக குட்டிக்கரணம் போட்டு குதிரை வால் பக்கம் வழுக்கி தரையில் விழுந்து கிடப்பார்.விழுந்த அதிர்சியில் அவருக்கு இரண்டு மூன்று நாட்கள் "அபான வாயு" சீராக பிரிப்பது கஷ்டமாகி விடும்.

நான்கடி உயர குட்டை/புல் சுவரை சேணமும் ..கடிவாளமும் இன்றி தாண்ட வேண்டிய நாளில் குதிரையும் ,பயிற்சியாளரும் சேர்ந்தாற் போல் தாண்டுவதென்பது மிகவும் அபூர்வம்...சுவருக்கு சற்று முன்னால்வரை நாலு கால் பாய்சலில் வந்து கொண்டிருக்கும் குதிரை கிட்டே வந்ததும் எச்சரிக்கை ஏதுமின்றி சடக்கென்று நின்று விடும்...பயிற்சியாளர் மட்டும் அனுமார் இலங்கை நோக்கி பாய்ந்தது போல் ஆகாயத்தில் எழும்பி நூரடி தாண்டிப் போய் விழுவார்.....அல்லது குதிரை ஒரு பக்கமும் பயிற்சியாளர் இன்னொரு பக்கமும் தாண்டுவர்.

இப்படிப் பட்ட பல சுவாரஸ்யங்கள் நிறைந்த குதிரையேற்ற பயிற்சியை 1980 ஆம் ஆண்டிலிறுந்து IAS பயிற்சியிலிருந்து அகற்றி விட்டார்களாம்.

விடுதலை??!!!! குதிரைகளுக்கா...பயிற்சியாளர்களுக்கா ??

அன்புடன்...ச.சங்கர்

5 comments:

கார்த்திக் பிரபு said...

nagaisuvaiyaay eludhi ullergal..nandru..valthukkal

ச.சங்கர் said...

நன்றி கார்த்திக் பிரபு

அன்புடன்...ச.சங்கர்

enRenRum-anbudan.BALA said...

//திடீரென்று படீர்...படீர் என்று இரண்டு மூன்று "அபான வாயுவை" பிரித்து விட்டு அதனால் மிரண்டு சரேலன ஜெட் விமானம் போல் கிளம்பும்.குதிரையின் மோல் அமர்ந்திருந்தவர் பின்பக்கமாக குட்டிக்கரணம் போட்டு குதிரை வால் பக்கம் வழுக்கி தரையில் விழுந்து கிடப்பார்.விழுந்த அதிர்சியில் அவருக்கு இரண்டு மூன்று நாட்கள் "அபான வாயு" சீராக பிரிப்பது கஷ்டமாகி விடும்.
//
Very witty :)))))

Boston Bala said...

நாங்களும் ரசிப்பதற்கு ரசனையுடன் ரசித்ததற்கு நன்றி.

ச.சங்கர் said...

ரெண்டு பாலா சார்களுக்கும் ரொம்ப நன்றி....