Sunday, June 05, 2005

படித்ததில் பிடித்ததில் மறக்காதது -- 1

உன் சந்தோஷக் கோட்டையை இடிக்க நினைப்பவன்
-----------------------------------------------------------------------
எதையுமே எதிர் மறையாக சிந்திக்கும் சிலர் உங்கள் சந்தோஷக் கோட்டையை இடிக்க முனைகையில் பின் வரும் சம்பவத்தை நினைவு கொள்ளுங்கள்.

ஒரு நாள் மூர்த்தி கோட்டு தைக்க துணி எடுத்துக் கொண்டு சின்னா டைலரிடம் போனார்.

"என்னா சார்....திடீர்னு கோட்டெல்லாம்"- டெய்லர் கேட்டான்

"Delhi-க்கு போரேம்பா,லீவுக்கு ஜாலியா f·பாமிலியோட" சந்தோஷம் மிளிர சொன்னார்.

"அட என்னா சார் நீ, Delhi போரேன்றியே, கேவலமான ஊரு சார்,செம வெய்யிலு, புழுதி, கூட்டம். அது சரி எப்பிடி போற?

" western Airlines" ல, டிக்கட் cheap-ஆக கிடைச்சுது

"அட போ சார், அத்ல எவனாவது போவானா? எப்ப பாத்தாலும் லேட்டு ,சின்ன flight வேறயாம், சாப்படு,தண்ணியெல்லாம் தர மாட்டாங்கனு வேற சொல்றாங்க.அத்த வுடு,Delhi-ல எங்க தங்க போறீங்க?

"கரோல் பாக்ல சொர்ண விஹார்னு ஹோட்டல்...." முடிக்கும் முன்னாலேயே மறித்து

"மேல சொல்லாத,புரிஞ்சிடிச்சி,ஏன் சார் f·பாமிலியோட போர.அங்க போய் தங்குவேன்றியே..A/c கடியாது.·பேனும் ஓடாது.மூட்டப் பூச்சி வேற. சரி, எங்கெல்லாம் சுத்திப் பாக்கப் போற?"
கொழந்தைகளுக்கு ரொம்ப நாளா குடியரசுத் தலைவர பாக்கணும்னு ஆசை.முடிஞ்சா கூட்டிட்டுப் போயி காட்டலாமுன்னுட்டு...."
"இதப்பார்டா..!! அவரு இன்னா... நீ எப்ப வருனேனுட்டு காத்துகினிருக்காராங்காட்டியும்.அவரப் பாக்க பிரதமர்,மந்திரி இவங்களே தல கீழா நிக்கிறாங்க.ஜோக்கடிக்காத சார்."
மூர்த்தி ஒன்றும் சொல்லவில்லை.
"இன்னாவோ போ, தண்டமா போப் போது பாத்துக்க " சின்னா நக்கலாக சிரித்தான்.
2 மாதம் கழித்து மீண்டும் கடைத்தெருவில் சின்னா மூர்த்தியை பார்த்தான்.
"என்னா சார் Delhi போய் வந்துட்டியா?ஒரே வெயில் தான? "
"இல்லப்பா நா போனப்ப நல்லா மழை பெஞ்சு விட்டதால வெயிலுமில்ல, புழுதியுமில்ல அப்புறம் metro train ஓடுறதால இப்ப Delhi ல traffic jam எல்லாம் கெடையாது.ரொம்ப நல்லா இருந்தது"
சின்னா விடாமல் "Flight எவ்வளவு நேரம் லேட்டு" என்றான்
"அதை ஏன் கேக்குற, அன்னக்கி அந்த air lines ஆரமிச்சு 1 வருஷம் ஆச்சாம்.அதுனால சரியான டயத்துக்கு போனதுமில்லாம flight-ல் எல்லாருக்கும் விருந்தே வச்சிட்டங்க.அது தவிர Delhi ல இறங்கும் போது ஆளுக்கு ஒரு வாச்சு வேற பரிசா குடுத்தாங்க."
"ம்..ம்.. சொர்ண விலாஸ் ஹோட்டல் அதே மூட்டப் பூச்சியோட....." என்று இழுத்தான்.
மூர்த்தி''அதாம்பா இல்ல..இப்ப அத இடிச்சி மூணு நட்சத்திர ஹோட்டலாக்கிட்டான்.நாங்க போகும் போது ஹோட்டல் full. நாங்க அட்வான்சா புக் செஞ்சிருந்ததால் எங்களுக்கு extra காசு வாங்காமல் ஒரு suit குடுத்துட்டான்.காலையில் டிபன் வேற free.பசங்க நல்லா enjoy பண்ணினாங்க" என்றார்.

"குடியரசு தலைவர் மாளிகை பக்கம் கூட விட்டிருக்க மாட்டானே,security அது இதுன்னுட்டு"

"நாங்க அந்தப் பக்கம் போயிட்டிருக்கும் போது security எங்களை கூப்பிட்டு குடியரசு தலைவர் ஒரு சுற்றுலா வந்த குடும்பத்துடன் பேச ஆசைப் படுகிறார்.நீங்க வர முடியுமான்னு கேட்டான்.நான் ம்..ன்னதும் நேர கூட்டிக்கிட்டு போயி அவர் முன்னாடி நிறுத்திட்டான்.எனக்கு கையும் ஓடலை,காலும் ஓடலை.குழந்தைகளுக்கு ஒரே சந்தோஷம் தாங்கல.அவர் கூட போட்டோ வேற எடுத்துக்கிட்டோம்."

சின்னா பிரம்மிப்புடன் "உங்கிட்ட குடியரசுத்தலைவர் என்ன பேசினார்" என்று கேட்டான்.

" யார் உனக்கு இவ்வளவு கேவலமாக கோட்டு தைத்தது ? இனிமேல் வேறு எங்காவது நல்ல டைலரிடம் தைக்கக் கொடு என்று சொன்னார்" மூர்த்தி சிரித்தவாரே சொல்லிவிட்டு நடந்தார்.

சின்னா முகம் கறுத்து நின்றான்.

எனவே நண்பர்களே!! சின்னா போன்று அறிவிலிகள் மற்றும் உங்கள் சந்தோஷத்தில் அக்கறை இல்லாதோர் உங்களை சோகப்படுத்த முயலும் போது மேற்சொன்ன கதையை நினைத்துப் பாருங்கள்.

No comments: