Sunday, June 15, 2008

பதில்கள் to எ அ பாலா மற்றும் கேள்விகள் to பினாத்தல் சுரேஷ்

பாலா ,

நன்றி மற்றும் கண்டனங்கள். நன்றி என்னை கூப்பிட்டதற்கு . கண்டனங்கள் 4 கேள்விகள் என்ற விதியை!? மீறி உப கேள்விகளுடன் 8 கேள்விகள் கேட்டதற்கு. இப்போது பதில்கள்.

என்றென்றும் அன்புடன் பாலா என்னை இந்தப்பதிவில் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே.

1. சமீபத்தில் நீ மேற்கொண்ட தாய்லாந்து விசிட்டின்போது நடந்த சுவாரசியமான நிகழ்வு பற்றிக் கூற முடியுமா ? "களியாட்டங்கள்" பற்றி விவரமாகக் கூறினால், தன்யனாவேன் :)

பாங்காங்கில் ஒருநாள் மாலை சுமார் 8 மணியளவில் ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு சாலையில் போய்க்கொண்டிருந்த போது 2 தாய்லாந்து இளைஞர்கள் இரண்டு அழகான தாய்லாந்து இளம் பெண்களை பலவந்தப்படுத்த முயன்று கொண்டிருக்கும் போது, நான் ஓடிப் போய் அடிதடியில் இறங்கி அந்த இருவரையும் காப்பாற்ற , அந்த இளம் பெண்கள் நன்றியுடன் என்னைக் கட்டிப் பிடித்து உதட்டில்.................என்று சுவாரஸ்யமாக கதை விட ஆசைதான். ...........ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லாமல் ஒரு டூரிஸ்டுக்கே உரித்தான பரபரப்பான ஷெட்யூலுடன் சுற்றிப்பார்த்தல், ஷாப்பிங் தவிர வேறு எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒரு வாரம் போனது என்பதுதான் உண்மை :)
என்னக் கவர்ந்த நிறைய விஷயங்களில் குறிப்பாக இரண்டு..பத்தாயா (pattaya)வில் பார்த்த "அல்கஸார்" என்ற காபரே நடனமும் , இரவு இரண்டு மணிக்கு வாக்கிங் ஸ்ட்ரீட்டில் ஜாலியாக நடந்து போனதும்.

இந்த அல்கஸார் என்பது ஒரு வகையான குழு காபரே நடனம். குடும்பத்துடன் பார்க்கலாம்( நானும் 8 வயது பையன் உட்பட குடும்பத்துடந்தான் போனேன்)1 மணி நேர நிகழ்ச்சியில் கண் முன்னேயூ சர் சர் என்று மாறும் தத்ரூப செட்களும், அதன் பிரும்மாண்டமும், இசைக்கேற்ப நடனமாடும் அழகிகளும், ஐரோப்பிய, சீன , இந்திய( ஒரு ஹிந்தி பாட்டுக்கு ஆடினாங்க..பேக்ரவுண்ட் செட்டிங் சொல்லணுமா?!! தாஜ்மஹால்தான்) , தாய்லாந்து , அரேபிய என அனைத்து கலாச்சாரங்களையும் வெளிப்படுத்தும் நடனங்கள் உண்மையிலேயே உலகத்தரம்.அதுவும் ஒருவர் அர்த்தநாரீஸ்வரர் போல ஒரு பாதி ஆண் உடையுடனும் மறு பாதி பெண் உடையுடனும் நடனமாடி ஆண்பெண் போல ஒரே நேரத்தில் அங்க அசைவு நளினம் காட்டியது ஹை லைட். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நடக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு மெயின் டூரிஸ்ட் அட்ராக்க்ஷன். காட்சி முடிவில் நடனம் புரிந்தோருடன் போட்டோவும் எடுத்துக் கொள்ளலாம்(தனியாக காசு கட்ட வேண்டும்) . நிகழ்ச்சி முடிந்து பஸ்ஸில் செல்லும் போது எங்கள் கைடு ஆடிய அழகிகள் அனைவருமே " பெண்களாக மாறிய ஆண்கள் " என்று சொல்லி எங்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றார். சில படங்கள் கீழே.




























அடுத்தது இரவு ஏழு மணி வரை மிகத் திராபையாக தூங்கி வழியும் "வாக்கிங் ஸ்ட்ரீட்" (தெரு பேரே அதனுங்கோ) அத்ற்கு மேல் புது மணப் பெண் கோலம் பூண்டு பார்கள், டிஸ்கோ ,மசாஜ் , மாஜிக் மற்றும் கடைகளில் அனைத்து கதவுகளிலும் விலை மாதர்கள் என அதிகாலை 2 மணி வரை உருமாறும் அதிசயம் நேரில் பார்த்தால்தான் நம்ப முடியும். இவ்வளவு இருந்தும் இங்கு எந்த ஒரு விரசமோ அல்லது அசம்பாவிதமும் இல்லாமல் மக்கள் குடும்பத்துடனோ இல்லை தனியாகவோ திருவிழா போல நடந்து செல்வது அதுவும் பெண்கள் தனியாக நடந்து செல்வது பார்த்தாலும் நம்புவது கடினம்,


















2. ஒரு கால கட்டத்தில் கம்யூனிஸ சித்தாந்தத்தில் (அது குறித்து நிறைய பேசியிருக்கிறீர்கள் கூட!) நம்பிக்கை வைத்திருந்த நீ, எப்போது ஏன் மாறினாய் ? நலிந்தவர் நலனில் அக்கறை இருப்பது போல் நடிக்கும் சந்தர்ப்பவாத இந்திய (போலி) கம்யூனிஸ்ட்களைப் பற்றி உன் கருத்துகள் யாவை ?

முதலமைச்சர் கருணாநிதியின் பாணியில் சொல்வதானால் " இன்னும் நானும் ஒரு கம்யூனிஸ்டுதான் " இப்போது அவர் மாதிரியே என் கம்யூனில் "என் குடும்பம் " மட்டுமே உள்ளது.இது நடுத்தர வர்கத்திற்குள் நடக்கும் ஒரு விஷயம்தான்.மேன்சனில் வசிக்கும் புதிதாக வேலைக்கு வந்த கொஞ்சமேனும் சமூக சிந்தனையுள்ள இளைஞர்கள் கம்யூனிச தாக்கம் இல்லாமல் இளமைப் பருவத்தை கடப்பது மிக அரிது. அப்படிப்பட்ட 10000 பேரில் 1 அல்லது 2 பேர்தான் கடைசிவரை அதே பாதையில் பயணிக்க முடிவதும் கண்கூடு.மற்றவரெல்லாம் சமூக நிர்பந்தம் மற்றும் சுற்றுப் புற சூழ்நிலைகளால் மாறி விடுகின்றனர். என்னை எந்த ஒரு தனி நிகழ்வும் மாற்றவில்லை.படிப்படியாக தாக்கம் குறைந்து விட்டது என்பதே உண்மை.

இந்தியாவைப் பொறுத்தவரை வெவ்வேறு கம்யூனிச குழுக்கள் (சிபிஐ,சிபிஎம்,மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் et all) கம்யூனிச சமுதாயம் நோக்கிய அவர்கள் பாதை என்ன என்று இன்னும் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதுவும் ஓட்டு அரசியலில்(Electoral politics) இருக்கும் சிபிஐ , சிபிஎம் போன்ற கட்சிகளின் கூத்து உச்சகட்டம். 80களில் முதல் எதிரி "நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ " காங்கிரஸ் கட்சி என்றும் அப்படிப்பட்ட கட்சியுடன் எந்தக் கூட்டும் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இன்று முதல் எதிரி மதவாத பாஜக . அதனை எதிர்க்க காங்கிரசுடன் கூட்டு என்று நிலைபாடு. பாஜகவின் இந்த அசுர வளர்ச்சிக்கு (1980 முதல் 2000 வரை) இவர்களே (இவர்களது அந்தக் காலத்தைய கண் மூடித்தனமான காங்கிரஸ் எதிர்ப்பே) முக்கிய காரணம் என்றே நான் நினைக்கிறேன். இவர்களது முக்கியமான பிற்போக்குத்தனமே "தங்களது தவறுகளை இவர்கள் ஒரு போதும் ஒத்துக் கொண்டதே இல்லை " மற்றவர்களைவிட (atleast on record) அதிகம் படிப்பதால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு மனோபாவமும் வந்துவிடுகிறது. "எல்லாம் தெரிந்துவிட்டால் எழுதும் பாட்டில் பிழை இருக்காது என்று அர்த்தமோ ?" என்று நக்கீரன் பாணியில் கேட்கத் தோன்றுகிறது. மற்ற படி இவர்களை " போலிகள் " என்று எல்லாவிஷயத்திலும் ஒட்டு மொத்தமாக சொல்வது கொஞ்சம் அதிகப் படிதான் :)

3. ஆணாதிக்கவாதிகள் போல் பெண்ணாதிக்கவாதிகளும் இருக்கிறார்கள் தானே ! அவர்களை எப்படி அடையாளம் காண்பது ? அவர்கள் குணாதிசயங்கள் யாவை ?

இருக்கிறார்கள் . இன்னும் சொல்லப் போனால் ஆண் பெண் உறவில் சமநிலை என்று எதுவும் இல்லை. ஒன்று பெண் அடங்கி இருக்கிறாள் அல்லது ஆண். இரண்டும் இல்லாதது பெரும்பாலும் விவாகரத்தில் அல்லது விவகாரத்தில் போய் முடிகிறது. பெண்ணாதிக்கவாதிகளை (சொந்த / மற்றவர்) அனுபவத்தில் கண்டு கொள்ள வேண்டியதுதான். பெண்ணாதிக்கவாதிகளின் குணாதிசயங்கள் கிட்டத்தட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று இருக்கும் ( give or take some percentage)

4. நாம் மும்பையில் இருந்த காலகட்டத்தில், நண்பர்கள் நாங்கள் தாராவிக்கு விசிட் அடிக்கும்போது, எங்கள் அழைப்பை நீ ஒரு தடவை கூட ஏற்றதில்லை ! என்ன காரணம் என்று இப்போதாவது கூறலாமே ?

தாராவிக்கு நீங்கபோகும் போதெல்லாம் fixed agenda இல்லாமல் போனது முதல் காரணம். பயம் இரண்டாவது ள் காரணம் Adventurist மனோபாவம் எனக்கு இயல்பிலேயே குறைவு என்று நினைக்கிறேன் :) . அது சரி .. இது சபையில் கேட்கவேண்டிய கேள்வியா ?

ஒரு வழியாக 4 கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டேன். நான் 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்றதும் நினைவுக்கு வந்தவர் பினாத்தல் சுரேஷ் அவருக்கான நாலு கேள்விகள்.

1. வலைப்பதிவு ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் திடீரென்று நான் இனிமேல் எழுதப் போவதில்லை என்று வெகுண்டு எழுந்தீர்களே இப்போது "சீனியர் வலிப்பதிவர்களில் ஒருவராக"!??? உங்கள் மனநிலை என்ன ?

2.முதல் காதல் அனுபவம் ( ஒரு தலையாக இருந்தாலும்) எங்கு, எப்போது & கடைசியில் என்ன ஆச்சு?

3.மனைவிக்கு முதல் குழந்தை பிறந்த போது எங்கிருந்தீர்கள்(டெலிவரி வார்ட் முன்பாக நகத்தை கடித்துக் கொண்டா?)? அப்போது மனதில் தோன்றிய எண்ணங்கள் ?

4.பணவீக்கம், விலை வாசி உயர்வு,கச்சா எண்ணை விலை உயர்வு இப்படி ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் இந்த தருணத்தில் உங்களை முதல்வன் பட ஸ்டைலில் ஒரு நாள் பிரதமராக (இந்தியாவிற்கு) ஆக்கினால் நீங்கள் எடுக்கும் ஐந்து முதன்மை முடிவுகள் என்னவாக இருக்கும் ?


டிஸ்கி : மேலே கொடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் நானே நேரடியாக சுட்டது.( அட இணையத்தில் இருந்து இல்லைங்க. என் காமராவின் வழியாக.) அதனால் போட்டோ நன்றாக இருந்தால் நான் பொருப்பல்ல.

அன்புடன்...ச.சங்கர்

*****************

5 comments:

ச.சங்கர் said...

சோதனை...படிக்கிறவங்களுக்குத்தான் :)

enRenRum-anbudan.BALA said...

சங்கர்,
சிரமம் பார்க்காமல், பதிலளித்ததற்கு நன்றி. வாசிக்க சுவாரசியமாகவே இருந்தது ! என் வலைப்பதிவில் மறுபதிப்பு செய்துள்ளேன்.

பினாத்தல் சுரேஷ் said...

போட்டாச்சு!

வல்லிசிம்ஹன் said...

படங்கள் நல்லா இருக்கு. பதிவும் இயல்பாவே அழகா இருக்கு.

ச.சங்கர் said...

பாராட்டுக்கு நன்றி வல்லிசிம்ஹன்.

///பதிவும் இயல்பாவே அழகா இருக்கு.///

இதுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்ஸ்