Friday, May 12, 2006

தேர்தல் 2006 ....எனது பார்வையில்


தேர்தல் 2006 ....எனது பார்வையில்

2006 சட்டசபை தேர்தல் முடிந்து....முடிவுகள் அறிவிக்கப் பட்டு நாளை கருணாநிதி 5ஆம் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

இந்த நிலையில் நடந்த சட்டமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறாது.

மொத்தம் பதிவான வாக்குகளில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம்....சென்ற முறையும் இந்த முறையும்
..................... 2006 ................. 2001

அதிமுக ............. 32.52 ............................ 31.44
திமுக ...................26.4 ............................ 30.92
பமக ................... 5.55 .............................. 5.56
காங்கிரஸ் .......... 8.38 ............................. 2.48
இடது கம்.......... .2.64 ............................. 1.68
வலது கம்யூ .....1.6 .............................. 1.59
மதிமுக ...............5.97 ............................. 4.65
தேமுதிக(விஜயகாந்த்)....... 8.32 .......... -------



1. அதிமுக சென்ற முறயை விட அதிக சதவிகித ஓட்டு வாங்கியும் தோற்றதும் , திமுக குறைந்த சதவிகித ஓட்டு வாங்கியும் வெற்றி பெற்றதும்
ஆச்சரியமில்லை....அது அவர்கள் போன முறை போட்டியிட்ட மொத்த இடங்கள் மற்றும் இந்த முறை போட்டியிட்ட மொத்த இடங்களைப் பொருத்து மாறியிருக்கிறது . அதாவது இந்த தேர்தலில் எந்த அலையோ அல்லது மக்களுக்கு கடந்த ஆட்சியாளர் மீது ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பது போன்ற வெறுப்போ இல்லை.....இது ஜெயலலிதாவைப் பொருத்த மட்டில் மிகப் பெரிய வெற்றியே !!!

2.ஆயிரம் பேசினாலும் கருணாநிதிக்கு இது தெரிந்தே இருந்ததால்தான் கூட்டணிக் கட்சிகளை தன்னுடன் இருத்திக் கொள்ள தாராளமாக சீட்டுகளை வாரி இறைத்து இன்று 1957 க்கு பிறகு முதல் முறையாக வெற்றி பெற்ற கட்சி தனிப் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிக் கட்சிகளின் பலத்தையும் நாட வேண்டிய நிலைமை ( இது திமுக-வின் பலகீனமே)தனிப் பெரும்பான்மை இல்லாதது ஒரு வகையில் நல்லதே...அதிகம் ஆட மாட்டார்கள் என்று நம்புவோம்.

3.நான் மேற்குறிப்பிட்ட கருத்து(கூட்டணிக் கட்சிகளை தன்னுடன் இருத்திக் கொள்ள தாராளமாக சீட்டுகளை வாரி இறைத்து ) மதிமுக வைப் பொறுத்த மட்டில் முரணாக இருக்கும்...அதாவது ஒரு சீட் குறைவாக கிடைத்ததால் வைகோ பிரிந்தது போனது ...பிரச்சினை ஒரு சீட் அல்ல....வைகோ வளர்வதை கருணநிதி விரும்பவில்லை...அது அவருக்கு பிறகு ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு முட்டுக் கட்டையாகி விடும் என்பதால்.ஏனெனில் கருணநிதிக்கு பிறகு திமுகவை பிளக்கும் சக்தி வைகோவிற்கு உண்டு...அதை தடுக்கும் திறன் ஸ்டாலினுக்கு இல்லை...காரணம் தென் மாவட்டங்களில் வைகோவிற்கு உள்ள செல்வாக்கு மற்றும் திமுகவில் தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் ஒத்துப் போகாதது?!!!!

4.ஜாதீய அரசியல் பண்ணித் திரியும் பாமக போன்ற மற்றும் மத அரசியல் செய்யும் பிஜேபி போன்ற கட்சிகளை விட .... கட்சி அமைத்த 6 மாதத்தில் அதிக சதவிகித வாக்குகள் (8.32 %) பெற்ற விஜயகாந்த் பாராட்டுக்குறியவர்....உண்மையில் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி அவருக்குதான்....அதாவது பாசாங்கில்லாமல் நேர்மையாக திராவிட கட்சிகளுக்கு மாற்று அமக்கப் பாடு படுகிறேன் என்று சொன்னதை மக்கள் ஏற்று மதித்திருக்கிறார்கள் / நம்புகிறார்கள் என்பதே....

உதாரணம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும்...மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்து கூட இன்றும் தமிழகத்தில் திராவிட கட்சிகளை அண்டிப் பிழைக்கும் நிலையில் உள்ள காங்கிரஸுக்கு இணையாக ஓட்டு சதவிகிதம் பெற்றிருப்பது சாதனைதான் ( இங்கு தேமுதிக நின்ற தொகுதிகள் காங்கிரசை விட மிக அதிகம் எனவே ஓட்டு சதவிகிதத்தை ஒப்பிடக்கூடாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும்...கூட்டணி எதுவுமில்லாமல்...ஜெயிக்கும் வாய்ப்பும் குறைவாய் இருந்த...6 மாதமே ஆன கட்சிக்கு இந்த ஓட்டு சதவிகிதம் மிகப் பெரிய வலிமையே..காங்கிரஸ் அனைத்து தொகுதியிலும் தனியாக நின்றாலும் இந்த சதவிகித வாக்கு பெருவது சந்தேகமே)

5.தமிழக மக்கள் ஜாதி , மத அரசியலை ஒரு அளவுக்கு மேல் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது திண்ணமாகிறது....நேர்மையான அணுகுமுறை உள்ளவர்களை நம்புகிறார்கள்.....தைரியமில்லாத ரஜினிக்கு இது நல்ல பாடம்...I wonder he missed the bus already......

6.மேலும் சில விவரங்கள்

ஒரு பேச்சுக்கு தேமுதிக....அதிமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் ....இதே ஓட்டுகளை அந்தந்த கட்சிகள் பெற்றிருந்தால் அதிமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கக் கூடிய மொத்த இடங்கள் 144 !!!

அதேபோல்

ஒரு பேச்சுக்கு தேமுதிக....திமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் ....இதே ஓட்டுகளை அந்தந்த கட்சிகள் பெற்றிருந்தால் திமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கக் கூடிய மொத்த இடங்கள் 197 !!!

ஆட்சி மாற்றம் மக்களாலா...விஜயகாந்தாலா ?????????!!!!!!!

எப்படிப் பார்த்தாலும் மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களித்திருப்பதாகவே நான் கருதுகிறேன்....ஆனால் ஆட்சி மாற்றத்தை மக்கள் விருப்பினார்கள் அதுவும் அதிமுகவை கவிழ்த்து திமுகவை கொண்டு வர விருப்பப் பட்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இந்த தேர்தலில் எனக்கு தென்படவில்லை!!!


அன்புடன்....ச.சங்கர்