Saturday, May 19, 2007

பதுங்கு குழியில் இரண்டு ....



இந்த வார ஆ.வி.யில் உலக சினிமா பகுதியில் செழியன் " No man's Land " என்ற படத்தினைப் பற்றி எழுதியிருக்கிறார்.

அந்தப் படம் பற்றி தமிழ் இயக்குனர் மிஷ்கின் சிறப்பு விமர்சனம் அளித்துள்ளார்..அதன் ஒரு பகுதி

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
.
" எந்த உயிரினமும் பிறக்கும் போதே போர்க்குணத்தை தன் உயிரில் ஒளித்து வைத்துக் கொண்டு பிறக்கிறது.தன் ஞாயத்தை இன்னொரு உயிரினத்தின் நியாயத்தில் புகுத்த முயற்சி செய்து தோற்றுப் போதலே போர்!
ஒரு பதுங்கு குழியில் மாட்டிக் கொண்ட இரண்டு எதிரிகள்.தான் சொல்வதே ஞாயம் என்றும், தனது சொந்தத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே போராடிப் போராடி,தங்களைக் கொலை செய்து கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள்.அல்லது இரண்டு கொள்கைகள்..அல்லது இரண்டு தேசங்கள்.

"உங்களால்தான் இந்தப் போர் முதலில் ஆரம்பிக்கப்பட்டது" என்று இரண்டு கதாபாத்திரங்களும் மாறி மாறிக் குற்றம் சாட்டிக் கொள்ள, என்னால் இந்தப் போர் இப்போதே நிருத்தப் பட வேண்டும் என்ற எண்ணம் படம் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயத்திலும் ஒலிக்க, இயக்குனர் உயரமாகிரார்.அவர் படைப்பின் ஆழம் புரிகிறது.

நண்பர்களே, தயவு செய்து இந்தப் படத்தை ஒரு முறை பாருங்கள். முடிந்தால் மறுமுறையும் பாருங்கள்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த விமர்சனம் தமிழ் வலைத்தளத்தின் இன்றைய நிலையை பற்றி மறை முகமாக சொல்வது போல் எனக்கு ஏன் தோன்றுகிறது ??? அல்லது இது எனது ப்ரமைதானா:)

அன்புடன்...ச.சங்கர்