Sunday, July 16, 2006

கேரக்டர்......லாஜிக் ரமேசு


நம்ப லாஜிக் ரமேசு படிச்சது பத்தாங்கிளாசுதான்...ஆனா ஆளு படு சாமர்த்தியம்.....லாஜிக்கா பேசுவான்....அதே போல லாஜிக் இல்லாத எந்த காரியத்திலும் எறங்க மாட்டான்....எது செய்தாலும் லாஜிக் பார்த்துதான் செய்வான்...


ரமேசு சொன்ன லாஜிக் முத்துக்கள் சில கீழே....உங்களுக்கு உதவட்டுமேன்னு குடுத்திருக்கேன்.

" உங்க அப்பாரு ஏழையா இருந்தா உங்க விதி... ஆனா உங்க மாமனாரு ஏழைன்னா அது உங்க முட்டாள்தனம்.."

" நா புத்திசாலியாதான் பொறந்தேன்...ஆனா படிச்சு பாழாயிட்டேன் "

" நாம அடுத்த மனுசாளுக்கு உதவி செய்ய இருக்கோம்..கரீட்டுதான்...அப்படீன்னா அடுத்த மனுசாள்லாம் என்னாத்துக்கு இருக்காங்க ?"

" உலகத்துல துட்டுதான் எல்லாம் அப்படீன்னுட்டு இல்ல...இப்பல்லாம் கிரெடிட் கார்டெல்லாம் இருக்குது "

"அல்லாரும் கண்ணாலம் கட்டிக்கணும்...ஏன்னா சந்தோசம் மட்டுமே வாழ்க்கை இல்லீங்கோ "

"உங்க எதிர்காலம் நீங்க காண்ற கனவுல இருக்கு...அதுனால சீக்கிரம் தூங்க போயிடுங்க "

"கடின உழைப்பு யாரையும் கொல்லாதுதான்...ஆனாலும் ரிஸ்க்கு எடுக்க முடியுமா ?"

" நெறைய படிச்சா நெறையா தெரிஞ்சுக்கலாம்...நெறைய தெரிஞ்சுகிட்டா நெறைய மறந்து பூடும்...நெறைய மறந்து பூடிச்சின்னா கொஞ்சமாதான் தெரிஞ்சிருக்கும்..பின்ன இன்னாத்துக்கு படிக்கிறது "


இதெல்லாம் படிச்சப்புறம் எனக்கு புரிஞ்ச ஒரு லாஜிக்

" பஸ் ஸ்டேசன்ல பஸ் நிப்பாட்டுவாங்க...ரயில்வே ஸ்டேசன்ல ரயிலு நிப்பாட்டுவாங்க..நம்மகிட்ட ஒரு ஒர்க் ஸ்டேசன் இருக்குதுங்கோ... அதுல....."

உங்களுக்கு எதுனா புரியுதா ?

அன்புடன்...ச.சங்கர்

1 comment:

ச.சங்கர் said...

நன்றி துளசி அவர்களே